Skip to main content

Super Tamils

இலங்கை – தமிழக கடல்வழியில் பதற்றம்… ஊடுருவல் அபாயத்தால் பாதுகாப்பு தீவிரம்!

தமிழகத்தின் தனுஷ்கோடி பகுதியில் காவல்துறை சோதனைச் சாவடிகள் கைவிடப்பட்டுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான சட்டவிரோத ஊடுருவல்கள் மற்றும் கடத்தல்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இலங்கைக்கும் இந்த பகுதிக்கும் இடையில் மிகக் குறுகிய கடல் எல்லையே காணப்படுவதால், இந்த பாதுகாப்பு குறைபாடு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னார் வரையான தூரம் வெறும் 38 கிலோமீற்றர் மட்டுமே. இதில் தனுஷ்கோடியில் இருந்து 11 […]

Read More

காலமானார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா!

தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் முன்னணி இயக்குநரான பாரதிராஜா அவர்கள் இன்று காலமானார். திரையுலகில் ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படும் அவரது மறைவு ஒட்டுமொத்த சினிமாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபகாலமாகவே அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சைகளை எடுத்து வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிர் பிரிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவை ஸ்டூடியோக்களுக்குள் இருந்து கிராமத்து மண்ணிற்கு அழைத்து வந்த பெருமை இவரையே சேரும். கிராம மக்களின் வாழ்வியலையும், […]

Read More

ஒன்றா? இரண்டா?…! தயிர் மற்றும் யோகர்ட் இடையே உள்ள அசல் வேறுபாடு தெரியுமா?

வீட்டுச் சமையலறைகளில் எப்போதும் இடம்பிடித்திருக்கும் ஒரு பாரம்பரிய உணவுப் பொருள் தான் தயிர். ஆனால், கால ஓட்டத்தில் சூப்பர் மார்க்கெட் அலமாரிகளை அலங்கரிக்கும் கப்களிலும் பாக்கெட்டுகளிலும் அடைக்கப்பட்ட யோகர்ட்டும் நம்முடைய அன்றாட உணவின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இப்போது வீட்டில் தயாரிக்கப்படும் தயிருடன், கடைகளில் வாங்கும் யோகர்ட்டும் நம் வீடுகளுக்குள் வந்துவிட்டது. இங்குதான் பலருக்கும் ஒரு சின்ன சந்தேகம் எழுகிறது. வீட்டுத் தயிரும், கடைகளில் கிடைக்கும் யோகர்ட்டும் ஒன்றுதானா? அல்லது இரண்டுக்கும் இடையில் ஏதேனும் வித்தியாசங்கள் இருக்கின்றனவா? […]

Read More

மனிதநேயத்தை நினைவூட்டிய நீதிபதி…! அதிர்ச்சியில் நீதிமன்றம்

வேடநத்தம் பள்ளி மாணவி கொலை வழக்கில் குற்றவாளி தர்மமுனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து தமிழகத்தின் போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா தீர்ப்பளித்தார். விளாத்திகுளம் பகுதியில் நடந்த கொடூரம்: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே இருக்கும் வேடநத்தம் கிராமத்தின் காட்டுப்பகுதியில், கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதியன்று 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி சடலமாக கண்டெடுக்கப்பட்டாள். இந்த அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்துவதற்காக, காவல்துறை தரப்பில் உடனடியாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. […]

Read More

முதலிரவிலேயே விவாகரத்து; காரணம் கேட்டு குடும்பம் அதிர்ச்சி

உத்தர பிரதேசத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் மிகவும் விசித்திரமான ஒரு திருமண முறிவு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மணமகள் மிதிலேஷ் குமாரிக்கும், தரம் சிங் குஷ்வாஹா என்பவருக்கும் முறைப்படி திருமணச் சடங்குகள் நடந்து முடிந்துள்ளன. ஆனால், புகுந்த வீட்டிற்குச் சென்ற முதலிரவிலேயே தனது கணவருடன் சேர்ந்து வாழ முடியாது என மணமகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்தத் திடீர் முடிவிற்குக் காரணம் என்னவென்று கேட்டபோது, தான் ஏற்கனவே வேறொருவரை காதலிப்பதாகவும், தனது குடும்பத்தினர் தன்னை அடித்துத் துன்புறுத்தி வலுக்கட்டாயமாக இந்தத் திருமணத்தைச் […]

Read More

ஏர் ஆம்புலன்ஸ் விபத்து; 7 பேர் உயிரிழப்பு அச்சம்

ராஞ்சியிலிருந்து டெல்லி நோக்கிப் புறப்பட்ட இந்த மருத்துவ விமானம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் சத்ரா மாவட்டக் காட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் வானூர்தியில் பயணித்த நோயாளி, மருத்துவர் மற்றும் விமானிகள் உட்பட மொத்தம் ஏழு பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு ராஞ்சியின் பிர்சா முண்டா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த பீச்கிராஃப்ட் C90 ரக விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. மோசமான வானிலை காரணமாக விமானத்தை திசைதிருப்ப அனுமதி கோரிய சில […]

Read More

60 அடி தேர் சரிவு; பக்தர்கள் பதற்றம்

வேலூர் பாலாற்றங்கரையில் புகழ்பெற்ற மயானக்கொள்ளை திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் காளி தேவி அலங்காரத்தில் அம்மன் திருத்தேரில் எழுந்தருளி, மார்க்கெட் மைதானத்தை நோக்கிப் புறப்பட்டார். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று அம்மனை மனமுருக தரிசனம் செய்து கொண்டிருந்தனர். பக்தர்களின் கூட்டத்திற்கு மத்தியில் தேர் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக 60 அடி உயரமான அந்த பிரம்மாண்ட தேர் நிலைகுலைந்து கீழே சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி காயமடைந்த 7 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள […]

Read More

2 நிமிடத்தில் 175 கருத்தடை அறுவைச் சிகிச்சை; வைத்தியர் சர்ச்சை

மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள ஒரு சமூக நல மையத்தில், சுமார் 175 பழங்குடியினப் பெண்களுக்கு ஒரே நாளில் ஒரு மருத்துவரால் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது. போதிய படுக்கை வசதிகள் இல்லாத நிலையில், அறுவை சிகிச்சை முடிந்த பெண்கள் தார்ச்சாலையோரத்திலும், குப்பைத் தொட்டிகளுக்கு அருகிலும் தரையில் படுக்க வைக்கப்பட்டிருந்தனர். ஒரு பெண்ணுக்கு இரண்டு நிமிடம் என மிகக் குறுகிய நேரத்தில், முறையான சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாமல் இந்தச் சிகிச்சைகள் அவசரகதியில் முடிக்கப்பட்டுள்ளன. […]

Read More

14 வயது சிறுமி மீதான தந்தை கொடூரம்; உறவினர்களும் சிக்கல்

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள புன்னப்பிரா பகுதியில், 14 வயது சிறுமி ஒருவர் தனது தந்தை மற்றும் உறவினர்களால் கடந்த நான்கு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தனது தோழியிடம் சிறுமி கண்ணீருடன் இந்தத் துயரத்தைப் பகிர்ந்துகொண்டதையடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெற்றோரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் பிரிந்து சென்ற நிலையில், சிறுமி தனது தந்தையின் சகோதரி வீட்டில் தங்கியிருந்துள்ளார். அங்கு தந்தை, அத்தையின் கணவர் மற்றும் […]

Read More

பப்ஜி மோகம்; இளைஞனுக்கு ஏற்பட்ட துயரம்

உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரைச் சேர்ந்த முகமது கைஃப் என்ற இளைஞர், தனது வீட்டில் நீண்ட நேரமாக ‘PUBG’ விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார். இரவு முழுவதும் ஹெட்போன் அணிந்து விடிய விடிய கேம் விளையாடும் பழக்கம் இவருக்கு இருந்ததாக அவரது குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். சம்பவம் நடந்த நாளன்று வழக்கம் போல கேம் விளையாடிக்கொண்டிருந்த கைஃபிற்கு திடீரென கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. சில நொடிகளிலேயே அவர் மயங்கி விழ, உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கும், பின்னர் […]

Read More