கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள புன்னப்பிரா பகுதியில், 14 வயது சிறுமி ஒருவர் தனது தந்தை மற்றும் உறவினர்களால் கடந்த நான்கு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தனது தோழியிடம் சிறுமி கண்ணீருடன் இந்தத் துயரத்தைப் பகிர்ந்துகொண்டதையடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெற்றோரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் பிரிந்து சென்ற நிலையில், சிறுமி தனது தந்தையின் சகோதரி வீட்டில் தங்கியிருந்துள்ளார். அங்கு தந்தை, அத்தையின் கணவர் மற்றும் அவரது மகன் ஆகிய மூவராலும் சிறுமி தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்பட்டு வந்தமை விசாரணையில் உறுதியாகியுள்ளது.
இந்தக் கொடூரச் செயல் தொடர்பாகப் பெறப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, சிறுமியின் தந்தை உள்ளிட்ட மூன்று பேரையும் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் ஆலோசனைகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
____________________________________________________________________________________________
Police in Kerala arrested three individuals, including a father and two relatives, for the repeated sexual abuse of a 14-year-old girl over a period of four years. The horrific incident came to light after the girl confided in a friend, leading to a formal police complaint and the subsequent arrest of the suspects.