வேலூர் பாலாற்றங்கரையில் புகழ்பெற்ற மயானக்கொள்ளை திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் காளி தேவி அலங்காரத்தில் அம்மன் திருத்தேரில் எழுந்தருளி, மார்க்கெட் மைதானத்தை நோக்கிப் புறப்பட்டார். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று அம்மனை மனமுருக தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.
பக்தர்களின் கூட்டத்திற்கு மத்தியில் தேர் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக 60 அடி உயரமான அந்த பிரம்மாண்ட தேர் நிலைகுலைந்து கீழே சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி காயமடைந்த 7 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட ஆட்சியர், விபத்து குறித்து நேரில் ஆய்வு நடத்தினார். எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும், பாதுகாப்பு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றவும் விழா குழுவினருக்கு அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
__________________________________________________________________________________________________________________________________
During the annual Mayanakollai festival in Vellore, India, a 60-foot tall temple chariot carrying Goddess Kali collapsed unexpectedly. Seven injured devotees were rushed to the hospital for treatment, prompting the District Collector to inspect the site and issue a stern warning to the organizers to ensure strict safety measures in the future.