60 அடி தேர் சரிவு; பக்தர்கள் பதற்றம்
வேலூர் பாலாற்றங்கரையில் புகழ்பெற்ற மயானக்கொள்ளை திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் காளி தேவி அலங்காரத்தில் அம்மன் திருத்தேரில் எழுந்தருளி, மார்க்கெட் மைதானத்தை நோக்கிப் புறப்பட்டார். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று அம்மனை மனமுருக தரிசனம் செய்து கொண்டிருந்தனர். பக்தர்களின் கூட்டத்திற்கு மத்தியில் தேர் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக 60 அடி உயரமான அந்த பிரம்மாண்ட தேர் நிலைகுலைந்து கீழே சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி காயமடைந்த 7 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள […]