Skip to main content

Super Tamils

விஷ பரிசோதனை விபரம்; சிறுமிகளின் உயிரிழப்பு

பீகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தில் விளையாட்டாகச் செய்த ஒரு காரியம் பெரும் துயரத்தில் முடிந்துள்ளது. உயிர் பிழைத்த 14 வயது சிறுமி அளித்துள்ள வாக்குமூலத்தின்படி, ஐந்து நண்பர்களும் சேர்ந்து ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு கொக்குகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் விஷத்தை எடுத்துச் சென்று, அதை உட்கொள்ளும் விபரீத முடிவை எடுத்துள்ளனர். “விஷம் குடித்தால் உண்மையில் மரணம் சம்பவிக்குமா அல்லது உயிர் பிழைப்போமா என்று சோதித்துப் பார்ப்போம் என என் தோழி கூறினாள். அதன் பிறகே இந்த முடிவை […]

Read More

கடவுள் பெயரில் கொடூரம்; மனைவிக்கு கருச்சிதைவு

மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள அதர்வா கிராமத்தில் வசிப்பவர் 21 வயதான இளைஞன் ஒருவன். தீவிர கடவுள் நம்பிக்கை கொண்டவனான இவரது மனைவி சமீபத்தில்தான் கர்ப்பமாகியிருந்தார். துரதிர்ஷ்டவசமாக, திடீரென அந்தப் பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளைஞன், கடவுள் தன் மீது கோபமாக இருப்பதாக நம்பியுள்ளார். எப்படியாவது தெய்வத்தைச் சாந்தப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தனது வீட்டில் ஒரு பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளார். பூஜைக்கான விரிவான ஏற்பாடுகளைச் […]

Read More

மருத்துவமனை அலட்சியம்; பிறந்த ஒரு மணி நேரத்தில் குழந்தை பலி

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்த இந்த சோகமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூர் பக்கர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த அருண் நிஷாத் – பிட்டு தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிறந்த குழந்தையின் உடல் வெப்பநிலையைச் சீராகப் பராமரிப்பதற்காக, அந்தப் பச்சிளம் குழந்தை ‘வார்மர்’ (Warmer) கருவியில் வைக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, அந்தச் சமயத்தில் ஏற்பட்ட திடீர் மின்கசிவு காரணமாகக் கருவியில் தீப்பிடித்தது. இதில் கருவிக்குள் இருந்த பச்சிளம் குழந்தை […]

Read More

காதலர் தின விசித்திர விளம்பரம்; அதிகாரிகள் கண்டனம்

காதலர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள ஒரு மதுபான கடை, குறிப்பிட்ட வகை வைன் பாட்டில்களை வாங்கினால் பீர் கேன்கள் இலவசம் என அதிரடி சலுகை ஒன்றை அறிவித்திருந்தது. இது 1970-ம் ஆண்டின் புதுச்சேரி மதுவரி விதிகளுக்கு எதிரானது என்பதால், சம்பந்தப்பட்ட கடை மீது அதிகாரிகள் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர். மது அருந்துவதைத் தூண்டும் வகையில் இவ்வாறான விளம்பரங்களைச் செய்வது சட்டப்படி குற்றம் எனத் தெரிவித்த வருவாய்த்துறை அதிகாரி, கடை உரிமையாளருக்கு விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பப்படும் […]

Read More

2026 முதல் சூரிய கிரகணம்: வானில் அதிசயம்

வானத்தில் நிகழும் இந்த அபூர்வக் காட்சியானது எதிர்வரும் 17ஆம் திகதி பிற்பகல் 3.26 மணிக்குத் தொடங்கி, இரவு 7.57 மணி வரை நீடிக்கும் என வானியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கும் மேலாக இந்த அதிசய நிகழ்வை விண்ணில் காண முடியும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும்போது, அது சூரியனின் மையப்பகுதியை மறைப்பதால் சூரியன் ஒரு பிரகாசமான ஒளிவட்டம் (Ring of Fire) போலத் தோற்றமளிக்கும். இது ஒரு பகுதி அளவு […]

Read More

இஸ்லாமிய இளைஞருடன் காதல்: பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

உத்தரப்பிரதேசத்தின் உம்ரி கிராமத்தைச் சேர்ந்த 19 வயது காஜல் மற்றும் 27 வயது முகமது அர்மான் ஆகிய இருவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர். கடந்த ஜனவரி 18-ம் தேதி இரவு அர்மான் தனது காதலியான காஜலைச் சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றபோது, காஜலின் மூன்று சகோதரர்களிடம் சிக்கியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த சகோதரர்கள், இருவரையும் மண்வெட்டியால் கொடூரமாக அடித்துக் கொலை செய்துவிட்டு, உடல்களை ஆற்றுப் பகுதியில் ரகசியமாகப் புதைத்துள்ளனர். இந்தக் கொடூரத்தைச் செய்த பின்னர், எதையும் அறியாதவர்கள் […]

Read More

திருமண தோஷ பரிகாரம்: பெண்ணுக்கு ஷாக் சம்பவம்

திருமண தோஷம் நீங்க பரிகாரம் செய்வதாக கூறி, பெண்ணிடமிருந்து ஒரு சவரன் நகை மற்றும் 18ஆயிரத்து 600 ரூபாய் ரொக்க பணத்தை திருடி சென்ற போலி ஜோசியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரி அருகே கோமளவள்ளி என்பவரது வீட்டிற்குச் சென்ற திருநெல்வேலியைச் சேர்ந்த சின்னராசு மற்றும் மிக்கில் ஆகிய இருவரும் தங்களை ஜோசியர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர். திருமணத் தடையைப் போக்கச் சிறப்புப் பூஜை செய்ய வேண்டும் என்று கூறி, சமையல் புளியில் நகைகளை வைத்துப் பூஜை […]

Read More

ப்ளாக் செய்த காதலன்: வீடு தேடி சென்று காதலி செய்த கொடூரம்

சத்தீஸ்கரில் 22 வயது இளம்பெண், தனது தொலைபேசி எண்ணை பிளாக் செய்த காதலனை வீடு தேடி சென்று மார்பில் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த இந்த ஜோடிக்கு இடையே, கடந்த சில காலமாகவே அடிக்கடி மனஸ்தாபங்கள் ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதன் உச்சகட்டமாக, அந்த இளைஞர் தனது காதலியின் செல்போன் எண்ணை பிளாக் செய்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆத்திரத்திற்கும் ஆளான அந்தப் பெண், தனது […]

Read More

போதையில் நடுவீதியில் அடாவடி: பரபரப்பு

பெங்களூரு லாவெல்லே வீதியில் உள்ள ஒரு உயர்தர கிளப்பிற்குச் சென்ற நபர், மதுபோதையில் அங்கிருந்தவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். தனது தந்தை அந்த கிளப்பில் உறுப்பினர் என்று கூறி உள்ளே நுழைய முயன்ற அவரை, பாதுகாப்பு ஊழியர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர், திடீரென தனது ஆடைகளை முழுமையாகக் களைந்துவிட்டு நிர்வாணமாக ரகளையில் ஈடுபட்டுள்ளார். சம்பந்தப்பட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அங்கிருந்த சிசிடிவி மற்றும் செல்போன் காட்சிகளில், அந்த நபர் ஒரு சொகுசு […]

Read More

தேர்தல் தடையாக 6 வயது மகளை கொன்ற தந்தை

மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் மாவட்டத்தில் உள்ள கெரூர் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான பாண்டுரங் கோண்டுமங்கள், வரவிருக்கும் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார். அதிகார ஆசையில் அவர் செய்த காரியம் தற்போது ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. பாண்டுரங்கிற்கு மொத்தம் மூன்று குழந்தைகள் இருந்தனர். ஆனால், அம்மாநில தேர்தல் விதிகளின்படி இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற கட்டுப்பாடு உள்ளது. தேர்தலில் நிற்பதற்குத் தடையாக இருந்த மூன்றாவது குழந்தையை எப்படியாவது அப்புறப்படுத்த வேண்டும் […]

Read More