சத்தீஸ்கரில் 22 வயது இளம்பெண், தனது தொலைபேசி எண்ணை பிளாக் செய்த காதலனை வீடு தேடி சென்று மார்பில் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீண்ட நாட்களாக காதலித்து வந்த இந்த ஜோடிக்கு இடையே, கடந்த சில காலமாகவே அடிக்கடி மனஸ்தாபங்கள் ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதன் உச்சகட்டமாக, அந்த இளைஞர் தனது காதலியின் செல்போன் எண்ணை பிளாக் செய்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆத்திரத்திற்கும் ஆளான அந்தப் பெண், தனது காதலன் தன்னைத் தவிர்த்துவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் பழகத் தொடங்கியிருப்பாரோ என்ற சந்தேகத்தில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
நேரடியாக காதலனின் வீட்டிற்கே சென்ற அந்தப் பெண், மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது மார்பில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, காதலனைக் கொலை செய்த அந்தப் பெண்ணைக் கைது செய்துள்ளனர்.
தற்போது இந்தப் பயங்கரக் கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் காதலியைத் தேடி வந்து கொலை செய்த இந்தச் சம்பவம், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
______________________________________________________________________________________________
In a shocking incident in Chhattisgarh, a 22-year-old woman stabbed her boyfriend to death after he blocked her phone number. Driven by jealousy and the suspicion that he was seeing someone else, she confronted him at his home and committed the crime; she has since been arrested and is currently under police investigation.