உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்த இந்த சோகமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூர் பக்கர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த அருண் நிஷாத் – பிட்டு தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிறந்த குழந்தையின் உடல் வெப்பநிலையைச் சீராகப் பராமரிப்பதற்காக, அந்தப் பச்சிளம் குழந்தை ‘வார்மர்’ (Warmer) கருவியில் வைக்கப்பட்டது.
துரதிர்ஷ்டவசமாக, அந்தச் சமயத்தில் ஏற்பட்ட திடீர் மின்கசிவு காரணமாகக் கருவியில் தீப்பிடித்தது. இதில் கருவிக்குள் இருந்த பச்சிளம் குழந்தை தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தது. இந்தத் துயரச் சம்பவத்தை உடனடியாகப் பெற்றோரிடம் தெரிவிக்காமல், பல மணிநேரம் கழித்தே மருத்துவமனை நிர்வாகம் கூறியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நிர்வாகத்தின் இந்த மெத்தனப் போக்கைக் கண்டு ஆத்திரமடைந்த உறவினர்கள், மருத்துவமனைக்கு வெளியே திரண்டு கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ள பொலிஸார், தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
____________________________________________________________________________________
A one-hour-old baby girl tragically died after a fire broke out in a medical warmer due to a short circuit at a private hospital in Kanpur, Uttar Pradesh. The hospital management is accused of delaying the news of the death for several hours, leading to angry protests by the family. Police have since formed a three-member committee to investigate the incident.