திருமண தோஷம் நீங்க பரிகாரம் செய்வதாக கூறி, பெண்ணிடமிருந்து ஒரு சவரன் நகை மற்றும் 18ஆயிரத்து 600 ரூபாய் ரொக்க பணத்தை திருடி சென்ற போலி ஜோசியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி அருகே கோமளவள்ளி என்பவரது வீட்டிற்குச் சென்ற திருநெல்வேலியைச் சேர்ந்த சின்னராசு மற்றும் மிக்கில் ஆகிய இருவரும் தங்களை ஜோசியர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர். திருமணத் தடையைப் போக்கச் சிறப்புப் பூஜை செய்ய வேண்டும் என்று கூறி, சமையல் புளியில் நகைகளை வைத்துப் பூஜை செய்வது போலப் பாசாங்கு செய்துள்ளனர். இந்த நாடகத்தின் மூலம் கோமளவள்ளியின் கவனத்தைத் திசைதிருப்பி, அவரிடமிருந்த ஒரு சவரன் நகை மற்றும் பணத்தைச் சுருட்டிக் கொண்டு தப்பியோடினர்.
பாதிக்கப்பட்ட கோமளவள்ளி அளித்த புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் போலி ஜோசியர்கள் இருவரையும் விரைவாகக் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து திருடப்பட்ட நகை மற்றும் ரொக்கப் பணத்தைப் பறிமுதல் செய்தனர். ஆன்மீக நம்பிக்கையைப் பயன்படுத்தி அரங்கேற்றப்பட்ட இந்த மோசடி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
_____________________________________________________________________________________________
Two fake astrologers from Tirunelveli were arrested near Puducherry for cheating a woman by promising to perform a ritual to remove marriage obstacles. They tricked her by placing her jewelry in tamarind pulp during a mock prayer and fled with a gold sovereign and cash, but were later caught by police using CCTV footage.