Skip to main content

Super Tamils

செயற்கை நுண்ணறிவு; மனித குலத்துக்கு அச்சுறுத்தலா?

செயற்கை நுண்ணறிவு மனிதக் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் அபாயம் இருப்பதாகக் கூறி, OpenAI நிறுவனத்தின் முக்கிய பொறியியலாளர் ஒருவர் பதவி விலகியது தொழில்நுட்ப உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு நடைமுறைகளில் திருப்தியின்மை மற்றும் லாபத்திற்காக பாதுகாப்பை நிறுவனங்கள் புறக்கணிப்பதே இவரது வெளியேற்றத்திற்கு முக்கிய காரணமாகும். ஏற்கனவே ‘அந்த்ரோபிக்’ நிறுவனத்தின் பாதுகாப்புத் தலைவரும் இதே காரணத்திற்காக வெளியேறிய நிலையில், இப்போது OpenAI பொறியியலாளரும் அதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். போதிய கட்டுப்பாடுகள் இன்றி AI தொழில்நுட்பம் வளர்வது எதிர்காலத்தில் பாரிய […]

Read More

இணைய வணிகம் பெயரில் ரூ.60 இலட்சம் மோசடி; CID விசாரணை

பெண்ணொருவரிடம் 60 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பணத்தை மோசடி செய்த இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதாகக் கூறி, ஒரு பெண்ணிடமிருந்து 61 இலட்சத்து 5,600 ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் கொழும்பு மற்றும் குளியாப்பிட்டியவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சந்தேகநபர்களில் ஒருவரது வங்கிக் கணக்கிற்கு அந்தப் பணம் அனுப்பப்பட்டுள்ளது. பின்னர், அந்தப் […]

Read More

மாயமான தொலைபேசிகள்; மக்களுக்கு கடும் எச்சரிக்கை

கடந்த 2025 ஆம் ஆண்டு மாத்திரம் நாடளாவிய ரீதியில் சுமார் 2,355 கையடக்கத் தொலைபேசிகள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொலைந்து போகும் அல்லது திருடப்படும் தொலைபேசிகள் நிதி மோசடி மற்றும் சட்டவிரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் எச்சரித்துள்ளார். உங்கள் தொலைபேசி காணாமல் போனால் உடனடியாக சிம் அட்டையை முடக்கிவிட்டு, IMEI இலக்கத்துடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதுடன் www.ineed.police.lk இணையதளத்திலும் பதிவு செய்வது அவசியமாகும். கடந்த 2025ல் 2,355 […]

Read More

உலக பரா தடகளம்; தங்கம் வென்ற ஜனனி தனஞ்சனா

துபாயில் நடைபெற்று வரும் 2026 உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் தொடரில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஜனனி தனஞ்சனா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பெண்களுக்கான 100 மீற்றர் (T46/47 பிரிவு) ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட ஜனனி, மின்னல் வேகத்தில் இலக்கை அடைந்து முதலிடத்தைப் பிடித்தார். சர்வதேச அரங்கில் அவர் வென்றுள்ள இந்தத் தங்கம், இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளது. அதேபோல், ஆண்களுக்கான நீளம் பாய்தல் (T46/47 பிரிவு) போட்டியில் இலங்கையின் புத்திக ஹேஷான் வெள்ளிப் பதக்கம் வென்று […]

Read More

பிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞன் பாலியல் குற்றத்தில் கைது

பிரித்தானியாவில் யுவதியை பாலியல் சீண்டல் செய்த இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சவுதாம்டன் பகுதியில் 19 வயது இளம்பெண் ஒருவருக்கு போதைப்பொருள் கொடுத்து, அவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக 21 வயதான வியான் சுரேந்திரநாதன் என்ற இலங்கை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த பெப்ரவரி 5ஆம் திகதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அவருக்கு மயக்க மருந்து கொடுத்தமை மற்றும் ‘Class A’ ரக போதைப்பொருட்களை வைத்திருந்தமை உள்ளிட்ட […]

Read More

இளைஞன் மீது தாக்குதல்;நடிகை மகன் உள்ளிட்ட குழுவுக்கு நீதிமன்ற அதிரடி உத்தரவு

கொழும்பின் புறநகர்ப் பகுதியான இராஜகிரியவில், இளைஞன் ஒருவரை மண்வெட்டியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராஜகிரியவில் இளைஞன் ஒருவர் மண்வெட்டியால் கொடூரமாகத் தாக்கப்படும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தினர். இந்தக் காணொளிகளை ஆதாரமாகக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட 7 பேரை பொலிஸார் தற்போது கைது செய்துள்ளனர். கடந்த 9ஆம் திகதி இது குறித்து வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், இந்தச் சம்பவம் சுமார் […]

Read More

கல்கிசையில் பாரிய சுற்றிவளைப்பு – பெண் அளித்த தகவல்

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபர் (பெண்) ஒருவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஐஸ் போதைப்பொருள், துப்பாக்கி மற்றும் போலி இலக்கத் தகடுகள் உள்ளிட்ட பல பொருட்களைக் கல்கிஸ்ஸ பொலிஸ் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இரத்மலானையில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பெண் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கல்கிஸ்ஸவில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சிக்கின. அங்கு 10 கிராம் ஐஸ், 8 இலட்சம் ரூபா பணம் மற்றும் ஒரு துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது. […]

Read More

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மத்திய, ஊவா, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று (12) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது. இதன்படி, நுவரெலியா, மாத்தளை, பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். வட மாகாணத்தில் ஓரளவு மழை எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை 2 மணிக்கு பின் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில […]

Read More

மருத்துவமனை அலட்சியம்; பிறந்த ஒரு மணி நேரத்தில் குழந்தை பலி

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்த இந்த சோகமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூர் பக்கர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த அருண் நிஷாத் – பிட்டு தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிறந்த குழந்தையின் உடல் வெப்பநிலையைச் சீராகப் பராமரிப்பதற்காக, அந்தப் பச்சிளம் குழந்தை ‘வார்மர்’ (Warmer) கருவியில் வைக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, அந்தச் சமயத்தில் ஏற்பட்ட திடீர் மின்கசிவு காரணமாகக் கருவியில் தீப்பிடித்தது. இதில் கருவிக்குள் இருந்த பச்சிளம் குழந்தை […]

Read More

அமெரிக்காவில் திடீர் விமான விபத்து; வீதியில் அவசர தரையிறக்கம்

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்திலுள்ள கெய்ன்ஸ்வில் பகுதியில் நேற்று ஒரு பரபரப்பான சம்பவம் நிகழ்ந்தது. சிறிய ரக விமானம் ஒன்றில் திடீரென எஞ்சின் கோளாறு ஏற்பட்டதால், திட்டமிட்டபடி விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் போனது. இதனால் வேறு வழியின்றி விமானி, அருகில் இருந்த வாகன நெரிசல் மிகுந்த பிரதான வீதி ஒன்றில் விமானத்தை அவசரமாகத் தரையிறக்க முயன்றார். வீதியில் தரையிறங்கிய அந்த விமானம், கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இந்த விபத்தில் பல வாகனங்கள் […]

Read More