நடுவீதியில் தம்பதி கொலை; கூலி விவரம் அம்பலம்
தலங்கம இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பாக நவகமுவவைச் சேர்ந்த இரு சகோதரர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் “டுடூ” மற்றும் “மோதர நிபுண” ஆகிய பாதாள உலகக் கும்பல் தலைவர்களுக்காக இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. “சுத்தா ஐயாவின்” ஒரு வேலையை முடிக்க வேண்டும் என வெளிநாட்டிலிருந்து வந்த உத்தரவின் பேரில், இவர்கள் வாடகைக்கு கார் எடுத்து துப்பாக்கியைக் கடத்திச் சென்று கொலையாளிகளுக்கு வழங்கியுள்ளனர். இந்தக் கொலைத் […]