Skip to main content

Super Tamils

ODI கிரிக்கெட்டில் புதிய அத்தியாயம்..! 200வது போட்டியில் களமிறங்கிய ஜோஸ் பட்லர்.

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒரு நாள் போட்டியானது நேற்றைய தினம் Birminghamஇல் இடம்பெற்றது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நேற்றைய தினம் Birmingham மைதானத்தில் தங்களது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் மோதிக்கொண்டன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர் Harry Brook, முதலில் துடுப்பெடுத்தாடுவதற்குத் தீர்மானித்தார். இதன்போது, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 258 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. வெற்றி […]

Read More

புதுக்குடியிருப்பில் அதிர்ச்சி..! வகுப்பறைக்குள் புகுந்து மாணவர்கள் மீது தாக்குதல் – 3 பேர் விளக்கமறியலில்.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியில் கடந்த 13.07.2026 அன்று பாடசாலை நேரம் வகுப்பு ஒன்றுக்குள் புகுந்து சக மாணவரை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியில் புதிதாக உயர்தரம் பயில்வதற்காக சேர்ந்த மாணவர்கள் மூவர் இன்னொரு வகுப்புக்குள் பாடம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது இரும்புக் கம்பியுடன் நுழைந்து அங்கு கற்றுக்கொண்டிருந்த மாணவர்கள் மீது சரமாரியாகத் தாக்கியிருக்கின்றனர். சம்பவத்தில் இரு மாணவர்கள் படுகாயம் […]

Read More

காரைநகரில் அதிரடி..! கொள்ளையடிக்கப்பட்ட வெளிநாட்டுப் பணம், நகைகளுடன் இருவர் கைது.

காரைநகர் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வருபவர்களின் வீடுகளைக் குறிவைத்து நடந்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் இருவரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். காரைநகரில் உள்ள ஒரு வீட்டில் 1600 கனேடிய டொலர், ஒரு சோடி காப்பு மற்றும் கடவுச்சீட்டு என்பன திருடப்பட்டுள்ளன. மற்றொரு வீட்டில் 400 அமெரிக்க டொலர் மற்றும் ஒரு லட்சம் இலங்கை ரூபாய் என்பன களவாடப்பட்டுள்ளன. வீட்டு உரிமையாளர்கள் அளித்த முறைப்பாட்டின் பேரில், யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினர் […]

Read More

16–17 வயதினருக்கு இரவு நேர சமூக ஊடகத் தடை..! பிரித்தானியா அதிரடி.

பிரித்தானியாவில் நள்ளிரவு முதல் அதிகாலை 6 மணி வரை 16 மற்றும் 17 வயதுடைய இளைஞர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு இயல்புநிலை கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள பதின்ம வயதினரின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அரசாங்கம் புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்படி, இன்ஸ்டாகிராம் (Instagram), டிக்டாக் (TikTok) மற்றும் யூடியூப் (YouTube) போன்ற முன்னணிச் செயலிகள், 16 மற்றும் 17 வயதுடையவர்களின் கணக்குகளில் இரவு 12 மணி முதல் அதிகாலை 6 […]

Read More

விஷ்ணு விஷாலின் புதிய சாதனை..! ‘கட்டா குஸ்தி 2’ வசூல் ரூ.45 கோடி.

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் வெளிவந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த வெண்ணிலா கபடி குழு, ராட்சசன், குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, கட்டா குஸ்தி போன்ற திரைப்படங்களை நம்மால் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ள திரைப்படம் தான் ‘கட்டா குஸ்தி 2’. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் […]

Read More

பிரித்தானியாவில் வெப்பம் உச்சம்..! 1976 சாதனையை தகர்த்த 2026.

50 ஆண்டுகளுக்கு முன்பு பிரித்தானியாவின் வரலாற்றுப் பக்கங்களில் 1976ஆம் ஆண்டின் கோடைக்காலம் என்பது யாராலும் மறக்க முடியாத ஒரு காலகட்டமாகவே பார்க்கப்படுகிறது. அந்த ஆண்டில், அதாவது சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பதாக, தொடர்ந்து 14 நாட்களுக்கு மேல் வெயிலின் தாக்கம் 30 டிகிரி செல்சியஸைத் தாண்டிப் பதிவாகியிருந்தது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தற்போதைய கோடையில் வெயில் 15 நாட்களையும் கடந்து சுட்டெரித்து வருவதால், அந்த 50 ஆண்டுகால வரலாற்று சாதனையை பிரித்தானியா தவிடு பொடியாக்கியுள்ளதாக […]

Read More

கிங்ஸ்பரி ஹோட்டல் குத்தகை விவகாரம்..! ஜனாதிபதி செயலகத்தில் ரகசிய பேச்சுவார்த்தையா?

அரசாங்கத்திற்கு வருடாந்த குத்தகை பணமாக வெறும் 2.5 மில்லியன் ரூபா மட்டுமே கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டல் வளாகத்திற்காக இதுவரை செலுத்தப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. பிரபல வர்த்தகர் தம்மிக பெரேராவிற்கு சொந்தமான இந்த பிரம்மாண்டமான ஹோட்டல் வளாகம், கொழும்பு 01 போன்ற மிகவும் பெறுமதிமிக்க பகுதியில் சுமார் 5.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதனடிப்படையில் கணக்கிட்டுப் பார்த்தால், ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஒரு மாதத்திற்கு வெறும் 38,000 ரூபாய் என்ற அதிர்ச்சியூட்டும் மிகக் குறைந்த வாடகைத் தொகையே அரசாங்கத்தால் […]

Read More

கனடாவில் பயங்கரம்..! தெருவிழாவில் துப்பாக்கிச்சூடு – 2 பேர் பலி, 5 பேர் காயம்.

கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘Salsa on St. Clair’ தெருவிழாவின் போது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன், மேலும் ஐந்து பேர் துப்பாக்கிக் காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஒட்டுமொத்தப் பகுதியையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். எனினும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார், இந்தத் தாக்குதலுக்கான […]

Read More

அதிர்ச்சி..! மலசல கூடத்துடன் இணைந்த குளியறையில் கோழி இறைச்சி தயாரித்து விற்பனை.

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில், கழிப்பறையோடு சேர்ந்த குளியலறையைப் பயன்படுத்தி நீண்டநாட்களாகக் கோழி இறைச்சி தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்த அதிர்ச்சிகரமான உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வைரவபுளியங்குளம் ரயில்வே வீதியில் இருந்து கதிரேசு வீதிக்குத் திரும்பும் சந்திப்பில் அமைந்துள்ள ஒரு கோழிக் கடையில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்கே விற்பனைக்காகக் கொண்டுவரப்படும் கோழிகளை, எந்தவித சுகாதார உணர்வும் இன்றி மலசலகூடத்திலும் அதனோடு இணைந்த குளியலறைப் பகுதியிலும் அடைத்து வைத்துள்ளனர். பின்னர் அதே அசுத்தமான இடத்திலேயே வைத்து கோழிகளை […]

Read More

அரையிறுதியில் அனல் பறக்கும் மோதல்..! பிரான்ஸ் vs ஸ்பெயின் இன்று.

மிகவும் எதிர்பார்க்கப்படும் உலக கிண்ண கால்பந்து தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில், ஐரோப்பிய ஜாம்பவான்களான ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் மைதானத்தில் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன. நாளை நள்ளிரவு 12:30 மணிக்கு இந்த விறுவிறுப்பான ஆட்டம் ஆரம்பமாக உள்ளது. இதனால் உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மத்தியில் தற்போதே ஆர்வம் பற்றிக்கொண்டிருக்கிறது. பிரான்ஸ் அணியின் பலமே அதன் கேப்டன் கிலியன் எம்பாப்பே தான். இந்தத் தொடரில் 8 கோல்களை […]

Read More