Skip to main content

Super Tamils

நான்கு மாவட்டங்களில் மழை வாய்ப்பு

இன்று மதியத்திற்குப் பிறகு நாட்டின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் மற்றைய இடங்களைப் பொறுத்தவரை, பொதுவாக வறண்ட வானிலையே நிலவும். பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் ஏனைய பகுதிகளில் வசிப்பவர்கள் வழக்கம் போலத் தங்கள் பணிகளைத் தொடரலாம் என வானிலை […]

Read More

பரீட்சை வற்புறுத்தல்; சினிமா பாணியில் மகன் கொடூரம்; பயத்தில் மகள் செயல்

உத்தரப்பிரதேசத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற அழுத்தம் தந்த தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டிய மகன் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நீட் தேர்வுக்குத் தயாராகுமாறு தந்தை கொடுத்த அழுத்தம் ஒரு கொடூரமான கொலையில் முடிந்துள்ளது. தனது தந்தை மன்வேந்தர் சிங்கை அவரது மகன் அக்சத் பிரதாப் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, உடலைத் துண்டு துண்டாக வெட்டி ஒரு டிரம்மில் மறைத்து வைத்துள்ளார். இந்தச் சம்பவம் மகளின் கண் […]

Read More

பரீட்சை எழுதிய மாணவனுக்கு இரவில் நேர்ந்த துயரம்

கிளிநொச்சியில் நேற்று மாலை மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மாணவன் காயங்களுடன் தப்பினார். தற்போது நடைபெற்று வரும் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி வரும் அந்த மாணவன், சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரீட்சை முடிந்து வீடு திரும்பியவர், பின்னர் மோட்டார் சைக்கிளில் கடைக்குச் சென்றபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்துக்குள்ளான மாணவனிடம் வாகனத்தைச் செலுத்துவதற்கான சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என போக்குவரத்து பொலிஸார் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் […]

Read More

தமிழர் பகுதியில் நெகிழ்ச்சி; 34 வாரங்களில் முக்குழந்தைகள் பிறப்பு!

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன. சம்மாந்துறையைச் சேர்ந்த தாய் ஒருவர் கல்முனை அஷ்ரஃப் வைத்தியசாலையில் 34 வாரங்களில் மூன்று ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளார். தாயும் குழந்தைகளும் நலமாக இருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. குழந்தைகளின் நலனுக்காக வைத்தியசாலையில் சிறப்பு பிரார்த்தனை நிகழ்வு நடைபெற்றது. இறுதியில், சிறுபிள்ளை வைத்திய நிபுணர் குழுவினர் குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கி கௌரவித்தனர். ______________________________________________________________________________________________________________________________________ A mother from Sammanthurai gave […]

Read More

தப்பிய குற்றவாளி மீண்டும் கைது; பொடி லெசி பயணம் முடிவு

இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க இன்று (27) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மும்பையில் இருந்து வந்த விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிணையில் வெளியேறி இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்த இவரை, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அழைத்து வந்துள்ளனர். ______________________________________________________________________________________________________________________________________________ Major drug trafficker and murderer ‘Podi […]

Read More

10 முறை சுட்டுக்கொல்லப்பட்ட சட்டத்தரணி; பகீர் பின்னணி

கொழும்பின் அக்குரெகொட பகுதியில் 2026 பெப்ரவரி 13ஆம் திகதி சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டாவது துப்பாக்கிதாரி, மேலும் 10 பாரிய குற்றங்களுடன் தொடர்புடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட சட்டத்தரணி தம்பதியின் வழக்கோடு தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரி மொனராகலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் கடற்படை வீரரான இவர் மீது பாலியல் வன்புணர்வு, கொலை, கொள்ளை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பாரிய […]

Read More

டிராக்டரில் சிக்கி 15 வயது சிறுவன் பலி

கல்கமுவ பொலிஸ் எல்லைக்குட்பட்ட 39 கந்த பகுதியில் நேற்று காலை ஒரு சோகமான விபத்து நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த சிறுவன் ஓடிக்கொண்டிருந்த டிராக்டரின் ஓட்டுநர் இருக்கைக்கு அருகே ஏற முயன்றபோது, எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக, அந்த டிராக்டரின் சக்கரத்திற்குள் சிறுவன் சிக்கிக்கொண்டார். இந்த விபத்து அங்கிருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட அந்தச் சிறுவன் உடனடியாக கல்கமுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. […]

Read More

நாட்டில் இன்று சீரான வானிலை

இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, நாட்டின் அநேகமான இடங்களில் வானம் தெளிவாகவும், சீரான வானிலையுமே காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற சூழலே நிலவும். இருந்தபோதிலும், நாட்டின் தென் மாகாணத்தின் சில இடங்களிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதால் அந்தப் பகுதி மக்கள் சற்றே அவதானமாக […]

Read More

7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துஸ்பிரயோகம்; 5 ஆசிரியர்கள்

கல்வி புகட்ட வேண்டிய ஆசிரியர்களே வேலியே பயிரை மேய்ந்த கதையாக மாறியுள்ள அதிர்ச்சி சம்பவம் ஒடிசாவில் அரங்கேறியுள்ளது. ஒரு ஆசிரியர் தொடங்கிய இந்த அராஜகம், பின்னர் மற்ற நான்கு ஆசிரியர்களுக்கும் தெரியவந்த நிலையில், அவர்களும் அந்தச் சிறுமியைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். நீண்ட நாட்களாகத் தொடர்ந்த இந்தத் துயரத்தை அந்தச் சிறுமி அண்மையில் தனது பெற்றோரிடம் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். இதனைத் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, மாவட்ட குழந்தைகள் நலக் குழுவின் உதவியை நாடினார். அக்குழுவினர் […]

Read More

தமிழர் பகுதியில் 3 பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த துயரம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு, புளியடி பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட குடும்பப் பெண்ணை மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவில் நிகழ்ந்த இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விசுவமடு புளியடி பகுதியில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியைக் கடக்க முயன்ற பெண்மணி மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தின் கோரத்தினால் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]

Read More