டிஜிட்டல் அபாயம்; பெண்களை மிரட்டி காணொளி கோரிய இளைஞன்
இளம் பெண்களின் அந்தரங்கத்தை வேட்டையாடிய ஒரு நபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிடியில் சிக்கியுள்ளார். சுமார் மூன்று ஆண்டுகளாகத் திட்டமிட்டு இந்த மோசடியில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர், நேற்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கணினி குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் போலியான இணைய இணைப்புகளை உருவாக்கி, மிகத் தந்திரமான முறையில் பெண்களின் கைபேசிகளுக்குள் ஊடுருவி வந்துள்ளார். அங்கிருந்த தனிப்பட்ட வீடியோக்களைத் திருடி, பின்னர் வட்ஸ்அப் ஊடாகப் பாதிக்கப்பட்ட பெண்களுக்கே […]