தென் மாகாணத்திலும் மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையோ அல்லது மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இன்றைய தினத்திற்கான வானிலை நிலவரம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வரட்சியான வானிலையே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பல பாகங்களில், குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அனுராதபுரம், காலி, மாத்தறை உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்பட வாய்ப்புள்ளது.
கடல் நிலவரத்தைப் பொறுத்தவரை, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பெரும்பாலும் சீரான வானிலையே நிலவும். காற்றானது வடகிழக்கு அல்லது வடமேற்கு திசையிலிருந்து மணிக்கு 20-30 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் கடல் மிதமான அலையுடன் காணப்படும்.
__________________________________________________________________________________________________________________________________________
The Department of Meteorology predicts afternoon thundershowers in parts of the Southern Province, Moneragala, and Ratnapura districts, while the rest of the country remains mostly fair. Mist is expected in several inland areas during the early morning, and coastal waters are predicted to be calm with moderate winds.