உத்தரப்பிரதேசத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற அழுத்தம் தந்த தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டிய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நீட் தேர்வுக்குத் தயாராகுமாறு தந்தை கொடுத்த அழுத்தம் ஒரு கொடூரமான கொலையில் முடிந்துள்ளது. தனது தந்தை மன்வேந்தர் சிங்கை அவரது மகன் அக்சத் பிரதாப் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, உடலைத் துண்டு துண்டாக வெட்டி ஒரு டிரம்மில் மறைத்து வைத்துள்ளார்.
இந்தச் சம்பவம் மகளின் கண் முன்னாலேயே நடந்துள்ளது. உண்மையைச் சொன்னால் கொன்றுவிடுவதாகத் தங்கையை மிரட்டிய அக்சத், தந்தையைக் காணவில்லை என நாடகமாடியுள்ளார். பொலிஸார் நடத்திய சோதனையில் டிரம்மில் இருந்த உடல் பாகங்கள் மீட்கப்பட்டதை அடுத்து, இந்த அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
__________________________________________________________________________________________________________________________________________
In a shocking incident in Uttar Pradesh, a college student was arrested for murdering his father, who had been pressuring him to pass the NEET exam. The son shot his father in front of his younger sister, dismembered the body, and hid the remains in a drum before filing a false missing person report to mislead the police.