Skip to main content

Super Tamils

மனைவியை உயிருடன் எரித்த கணவன்; அதிர்ச்சி சம்பவம்

பரசன்கஸ்வெவ, மெதகம பகுதியில் நேற்று (13) ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட மோதல் எல்லை மீறியதால், கணவனே தனது மனைவியை தீ வைத்து எரித்துக் கொன்ற கொடூரமான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலையில் உயிரிழந்தவர் பரசன்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய பெண் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். ஒரு குடும்பத் தகராறு இவ்வளவு பெரிய விபரீதத்தில் முடிந்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பரசன்கஸ்வெவ போலீசார் தீவிர […]

Read More

பெண்களை இலக்கு வைத்து மோசடி – பெண் கைது

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசை காட்டி, பெண்களிடம் பல லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்த ஒரு பெண்ணும் ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், மோசடி செய்யப்பட்ட சுமார் 31 இலட்சம் ரூபாய் பணத்தில் ஒரு பகுதி சந்தேக நபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு […]

Read More

எப்ஸ்டீன் விவகாரம்; நோர்வே முன்னாள் பிரதமர் மீது வழக்கு

அமெரிக்காவின் மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு வைத்திருந்த நோர்வே நாட்டின் முன்னாள் பிரதமர் தோர்ப்ஜோர்ன் ஜாக்லாண்ட் மீது “கடுமையான ஊழல்” குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆணைக்குழுவின் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய ஜாக்லாண்டிற்கு வழங்கப்பட்டிருந்த தூதரகப் பாதுகாப்பு (Immunity) நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, நோர்வேயின் பொருளாதாரக் குற்றப்பிரிவு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அமெரிக்க அரசாங்கம் வெளியிட்ட ‘எப்ஸ்டீன் கோப்புகளில்’ உள்ள மின்னஞ்சல் தரவுகளின்படி, எப்ஸ்டீன் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னரும் ஜாக்லாண்ட் மற்றும் அவரது […]

Read More

தங்க விலை ஏற்றத் தாழ்வு; இன்றைய நிலவரம்

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினத்துடன் (12.02.2026) ஒப்பிடுகையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, சர்வதேசச் சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,910 டொலராகப் பதிவாகியுள்ளது. நேற்று ஒரு அவுண்ஸ் தங்கம் 5,078 டொலர்கள் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்தத் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. தங்கத்தைப் போலவே வெள்ளி விலையிலும் சரிவு காணப்படுகிறது. இன்று ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை […]

Read More

பிரித்தானியா தவிர்த்து புதிய தேர்வு செய்யும் இலங்கை மாணவர்கள்

பிரித்தானியாவில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 6 சதவீதத்தால் குறைந்து, 685,565 ஆகப் பதிவாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் வழங்கப்பட்ட கல்வி விசாக்களின் எண்ணிக்கை, 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 31 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, மாணவர்களுடன் வரும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான விசாக்கள் 57 சதவீதம் வரை பெருமளவில் குறைந்துள்ளன. இலங்கை மாணவர்களுக்கிடையே பிரித்தானிய முதுகலை படிப்புகள் மீதிருந்த ஆர்வம் […]

Read More

ஆசிரியர் 59 இலட்சம் மோசடி – அதிர்ச்சி சம்பவம்

களுத்துறை பகுதியில் வீடுகளுக்குச் சென்று மேலதிக வகுப்புகளை நடத்தி வந்த 31 வயதுடைய ஆசிரியர் ஒருவர், அங்கிருந்த பெண்களை ஏமாற்றி நகைகளை மோசடி செய்த குற்றச்சாட்டில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அளுத்கம, கனேகம பகுதியைச் சேர்ந்த இவர், பாடம் கற்பிக்கச் செல்லும் வீடுகளில் தமக்கு அவசர பணத்தேவை இருப்பதாகக் கூறி பெண்களிடம் இருந்து நகைகளைப் பெற்றுள்ளார். அளுத்கம பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது சகோதரனின் பிள்ளைக்குக் கற்பிக்க வந்த இவரிடம் கடந்த 2025 மார்ச் மாதம் […]

Read More

யாழ்ப்பாணம்; மதமாற்ற குற்றச்சாட்டு; விசாரணை கோரிக்கை

யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மீது மதம் மாற்றம் மற்றும் பண மோசடி தொடர்பான புகார்கள் கிளம்பியுள்ளன. பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர்களின் உறவினர்கள், அந்தப் பெண்ணின் செயல்பாடுகள் குறித்து பெரும் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, 64 வயதுடைய நபர் ஒருவருக்குப் பணமும் பொருள்களும் ஆசை காட்டப்பட்டு, அவர் மதமாற்றம் செய்யப்படவிருந்ததாக அவருடைய குடும்பத்தினர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக உரிய தரப்பினர் முறையான விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். […]

Read More

கடவுச்சீட்டு பெற நேரில் வர தேவையில்லை

பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய அலுவலகங்களுக்கு இன்று (13) சேவை பெறுவதற்காக பொதுமக்கள் வருகைத் தருவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் நேற்று இந்த அவசரமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் திடீரென ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு இன்னும் சரிசெய்யப்படாத காரணத்தால், மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதைத் தவிர்க்க இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் வழக்கமான சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (16) முதல் […]

Read More

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை

வானிலை அறிக்கையின்படி, ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும். வடக்கு மாகாணத்திலும் அநுராதபுரம், ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளில் மதியத்திற்கு பிறகு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சப்ரகமுவ மாகாணம் மற்றும் களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம். மேலும், மேற்கு மற்றும் சப்ரகமுவ […]

Read More

துப்பாக்கி முனையில் தாலி; வைரலாகும் காணொளி

இந்தியாவில் பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில், காவல்துறைத் தேர்விற்குத் தயாராகிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு, போதைப்பொருள் கொடுக்கப்பட்ட நிலையில் வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து வைக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பீகாரில் துப்பாக்கி முனையில் மணமகனைக் கடத்தித் திருமணம் செய்து வைக்கும் ‘பகடவா விவா’ எனும் கலாசாரம் நிதிஷ் குமார் என்ற இளைஞருக்கு நேர்ந்துள்ளது. நூலகத்திற்குச் சென்ற இவரை ஒரு கும்பல் கடத்திச் சென்று, போதைப்பொருள் கொடுத்து மயக்கமடையச் செய்து, ஒரு கோவிலில் வைத்து வலுக்கட்டாயமாகத் திருமணம் […]

Read More