பிரித்தானியாவில் யுவதியை பாலியல் சீண்டல் செய்த இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சவுதாம்டன் பகுதியில் 19 வயது இளம்பெண் ஒருவருக்கு போதைப்பொருள் கொடுத்து, அவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக 21 வயதான வியான் சுரேந்திரநாதன் என்ற இலங்கை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த பெப்ரவரி 5ஆம் திகதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அவருக்கு மயக்க மருந்து கொடுத்தமை மற்றும் ‘Class A’ ரக போதைப்பொருட்களை வைத்திருந்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
A 21-year-old Sri Lankan youth, Viyan Surendranathan, was arrested in Southampton, UK, for allegedly drugging and sexually assaulting a 19-year-old woman. He faces multiple charges, including sexual assault and possession of Class A drugs.