Skip to main content

Super Tamils

போதை மாத்திரைகளை விழுங்கி கடத்தல் முயற்சி… கட்டுநாயக்கில் வெளிநாட்டு பெண் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், சுமார் 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய 237 கிராம் கொக்கைன் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் அங்கோலாவைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் ஆவார். இவர் அங்கோலாவிலிருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகருக்குச் சென்று, அங்கிருந்து கத்தார் நாட்டின் தோஹா வழியாக இலங்கைக்கு வந்திருப்பது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. 14 கொக்கைன் மாத்திரைகள் மீட்பு […]

Read More

பொலிஸாரின் அதிரடியால் வெளியான அதிர்ச்சி பின்னணி ; யாழில் கூண்டோடு சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழ்ப்பாணம் தீவகப் பகுதியில் தொடர்ந்து அரங்கேறி வந்த மாட்டுத் திருட்டு, சட்டவிரோத இறைச்சி விற்பனை மற்றும் வீடுகளை உடைத்து கொள்ளையடித்தல் போன்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஏழு பேர் கொண்ட கும்பலை ஊர்காவற்துறை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த கும்பலின் முக்கிய குற்றவாளியிடமிருந்து 2300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். வேலணை, புங்குடுதீவு, அல்லைப்பிட்டி ஆகிய கிராமங்களில் பண்ணையாளர்களின் மாடுகள் மர்மமான முறையில் திருடப்பட்டு, சட்டவிரோதமாக இறைச்சியாக்கப்பட்டு […]

Read More

போதைப்பொருள் விற்பனையால் சொகுசு வாழ்க்கை..!அதிரடியாக கைப்பற்றிய பொலிசார்.

கொழும்பு, பொரளைப் பகுதியில் உடனடி பணப் பரிமாற்ற முறைகள் மூலம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த தம்பதியினரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் நடத்திய தீவிர புலனாய்வுத் திட்டத்தின் அடிப்படையில் தான் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. பொரளை, பேஸ்லைன் வீதியில் உள்ள சிறிசர உயன பகுதியில் வசித்து வந்த இந்த தம்பதியினர், கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்தே இந்த சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்தை நடத்தி வந்துள்ளமை தற்போது வெளிச்சத்திற்கு […]

Read More

பிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞன் பாலியல் குற்றத்தில் கைது

பிரித்தானியாவில் யுவதியை பாலியல் சீண்டல் செய்த இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சவுதாம்டன் பகுதியில் 19 வயது இளம்பெண் ஒருவருக்கு போதைப்பொருள் கொடுத்து, அவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக 21 வயதான வியான் சுரேந்திரநாதன் என்ற இலங்கை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த பெப்ரவரி 5ஆம் திகதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அவருக்கு மயக்க மருந்து கொடுத்தமை மற்றும் ‘Class A’ ரக போதைப்பொருட்களை வைத்திருந்தமை உள்ளிட்ட […]

Read More

சொகுசு காரில் சந்தேக நடவடிக்கை; இருவர் கைது

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் இன்று போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசேட சுற்றிவளைப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அந்த வழியாக வந்த கப் ரக வாகனம் ஒன்றை வழிமறித்து பொலிஸார் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். இந்தச் சோதனையின் போது, வாகனத்திற்குள் மிகவும் நுணுக்கமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தைப் பறிமுதல் செய்த பொலிஸார், அதிலிருந்த இரண்டு பேரைக் கைது […]

Read More

போதைப்பொருள் அடிமை மகன்: தந்தை செய்த அதிர்ச்சி செயல்

பொலனறுவையில் இளைஞர் ஒருவர் அவரின் தந்தையாரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பொலனறுவை, மெதிரிகிரியை பிரதேசத்தில் நேற்று (25) இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு தனது தந்தையால் கொல்லப்பட்டவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட இளைஞர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தனது தந்தையுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு, வீட்டில் தொடர்ந்து பல குழப்பங்களை விளைவித்து வந்துள்ளார். இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், அது […]

Read More

1.5 கிலோ ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்: இருவர் கைது

1 கிலோ 501 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களை மாதம்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (22) அதிகாலை மாதம்பிட்டிய பகுதியில் உள்ள ‘சத்ஹிரு செவன’ அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் முச்சக்கரவண்டி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதனைச் சோதனையிட்ட பொலிஸார், அங்கிருந்த இருவரிடமிருந்து பெருமளவிலான ஐஸ் போதைப்பொருளைக் கைப்பற்றியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வெள்ளம்பிட்டிய மற்றும் கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த 24 மற்றும் 29 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். […]

Read More

900 மில்லியன் போதைப்பொருள் பறிமுதல்: ஒருவர் கைது

நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நிட்டம்புவ பகுதியில் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது. கோணஹேன விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நிட்டம்புவ – பின்னகொல்லவத்தை பகுதியில் உள்ள அரலிய ஒழுங்கையில் அதிரடிச் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது முச்சக்கர வண்டி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட சுமார் 61 கிலோ 838 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் […]

Read More