Skip to main content

Super Tamils

நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்… 3 வயது குழந்தையை கொன்ற தாய்!

இந்தியாவின் தெலங்கானா மாநிலம், சித்திபேட் மாவட்டத்தில் மூன்று வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், அவனது தாயும் அவருக்கு நெருக்கமான ஒரு நபரும் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். தீகுல் கிராமத்தைச் சேர்ந்த சுவாமி – ஜோதி தம்பதியரின் மூன்று வயது மகனான ஹரிகிருஷ்ணா கடந்த மாதம் உயிரிழந்தார். இந்த மரணம் ஆரம்பத்தில் ஒரு சாதாரண விபத்து என்றே அனைவருக்கும் சொல்லப்பட்டது. ஆனால், அன்று வீட்டில் என்ன நடந்தது என்று போலீசார் தீவிரமாக விசாரித்தபோது, அந்த […]

Read More

வித்யா கொலை வழக்கு: மூவரின் மரண தண்டனையை உறுதி செய்த யாழ் மேல் நீதிமன்றம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி சிவலோகநாதன் வித்யா கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று அதிகாரப்பூர்வமாக வாசித்து உறுதிப்படுத்தியுள்ளது. அதேநேரம், இந்த வழக்கில் இருந்து உச்ச நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என அறிவிக்கப்பட்ட இரண்டு பேரையும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று முறைப்படி விடுதலை செய்து உத்தரவிட்டது. கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் தேதியன்று பள்ளிக்குச் […]

Read More

“அமெரிக்காவில் அதிர்ச்சி! குடும்பத் தகராறில் 6 பேர் படுகொலை; குற்றவாளியும் உயிரை மாய்த்தார்”

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் உள்ள மஸ்கடின் பகுதியில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஒரு நபர் மூன்று வெவ்வேறு இடங்களுக்குச் சென்று, மொத்தம் ஆறு பேரை சுட்டுக் கொன்றுள்ளார். இந்த கோர சம்பவத்திற்கு குடும்பப் பின்னணியில் ஏற்பட்ட மோதல்கள்தான் காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்குள்ள ஒரு வீட்டில் இரத்த வெள்ளத்தில் நான்கு பேர் கிடப்பதைக் கண்டு அதிர்ந்தனர். அவர்கள் […]

Read More

நடுவீதியில் தம்பதி கொலை; கூலி விவரம் அம்பலம்

தலங்கம இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பாக நவகமுவவைச் சேர்ந்த இரு சகோதரர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் “டுடூ” மற்றும் “மோதர நிபுண” ஆகிய பாதாள உலகக் கும்பல் தலைவர்களுக்காக இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. “சுத்தா ஐயாவின்” ஒரு வேலையை முடிக்க வேண்டும் என வெளிநாட்டிலிருந்து வந்த உத்தரவின் பேரில், இவர்கள் வாடகைக்கு கார் எடுத்து துப்பாக்கியைக் கடத்திச் சென்று கொலையாளிகளுக்கு வழங்கியுள்ளனர். இந்தக் கொலைத் […]

Read More

நடுவீதியில் தம்பதி சுட்டுக்கொலை; பகீர் பின்னணி

அக்குரேகொட பகுதியில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான இரட்டைக்கொலை குறித்து போலீசார் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர். உயிரிழந்த சட்டத்தரணி, ‘கரன்தெனிய சுத்த’ எனப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினரின் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையாகி வந்தவர் என்பது தெரியவந்துள்ளது. பாதுகாப்புப் பிரிவினரின் முதற்கட்ட சந்தேகத்தின்படி, தனது கட்சிக்காரர் தொடர்பான ரகசியத் தகவல்களை ‘லொகு பெட்டி’ என்பவரது குழுவிற்கு இந்த சட்டத்தரணி கசியவிட்டுள்ளார். இதன் காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தில், கரன்தெனிய சுத்தவின் திட்டமிடலின் கீழ் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் […]

Read More

மனைவியை உயிருடன் எரித்த கணவன்; அதிர்ச்சி சம்பவம்

பரசன்கஸ்வெவ, மெதகம பகுதியில் நேற்று (13) ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட மோதல் எல்லை மீறியதால், கணவனே தனது மனைவியை தீ வைத்து எரித்துக் கொன்ற கொடூரமான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலையில் உயிரிழந்தவர் பரசன்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய பெண் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். ஒரு குடும்பத் தகராறு இவ்வளவு பெரிய விபரீதத்தில் முடிந்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பரசன்கஸ்வெவ போலீசார் தீவிர […]

Read More

கொடூர கொலை: முன்னாள் இராணுவ வீரர் பின்னணி

குருநாகல் – யக்வில, தம்பாடிய பகுதியில் தளபாடக் கடை நடத்தி வந்த 42 வயதுடைய உரிமையாளர் ஒருவர் இன்று (09.02.2026) கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டே அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் மனைவி வேலைக்காக வெளிநாடு சென்றிருக்கும் நிலையில், இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நீண்டகாலமாக இருந்த முன்விரோதமே இந்தப் படுகொலைக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளை அடுத்து, 40, 45 மற்றும் […]

Read More

கழுத்தறுத்து இளைஞன் கொலை; வட்டிப்பணம் பின்னணி

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் பெலியத்தை பகுதியில் நேற்று மாலை அரங்கேறிய கோரமான கொலைச் சம்பவம் அந்த ஊர் மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் ஒரு வாலிபர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டுவனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்தச் சம்பவத்தில் பலியாகியுள்ளார். வட்டிக்குப் பணம் கொடுப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே நீண்டகாலமாகப் பகை இருந்து வந்ததாகவும், நேற்றைய தினம் ஏற்பட்ட கடும் வாக்குவாதம் கொலையில் முடிந்திருப்பதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட […]

Read More

இஸ்லாமிய இளைஞருடன் காதல்: பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

உத்தரப்பிரதேசத்தின் உம்ரி கிராமத்தைச் சேர்ந்த 19 வயது காஜல் மற்றும் 27 வயது முகமது அர்மான் ஆகிய இருவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர். கடந்த ஜனவரி 18-ம் தேதி இரவு அர்மான் தனது காதலியான காஜலைச் சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றபோது, காஜலின் மூன்று சகோதரர்களிடம் சிக்கியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த சகோதரர்கள், இருவரையும் மண்வெட்டியால் கொடூரமாக அடித்துக் கொலை செய்துவிட்டு, உடல்களை ஆற்றுப் பகுதியில் ரகசியமாகப் புதைத்துள்ளனர். இந்தக் கொடூரத்தைச் செய்த பின்னர், எதையும் அறியாதவர்கள் […]

Read More

தேர்தல் தடையாக 6 வயது மகளை கொன்ற தந்தை

மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் மாவட்டத்தில் உள்ள கெரூர் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான பாண்டுரங் கோண்டுமங்கள், வரவிருக்கும் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார். அதிகார ஆசையில் அவர் செய்த காரியம் தற்போது ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. பாண்டுரங்கிற்கு மொத்தம் மூன்று குழந்தைகள் இருந்தனர். ஆனால், அம்மாநில தேர்தல் விதிகளின்படி இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற கட்டுப்பாடு உள்ளது. தேர்தலில் நிற்பதற்குத் தடையாக இருந்த மூன்றாவது குழந்தையை எப்படியாவது அப்புறப்படுத்த வேண்டும் […]

Read More