அக்குரேகொட பகுதியில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான இரட்டைக்கொலை குறித்து போலீசார் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர். உயிரிழந்த சட்டத்தரணி, ‘கரன்தெனிய சுத்த’ எனப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினரின் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையாகி வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
பாதுகாப்புப் பிரிவினரின் முதற்கட்ட சந்தேகத்தின்படி, தனது கட்சிக்காரர் தொடர்பான ரகசியத் தகவல்களை ‘லொகு பெட்டி’ என்பவரது குழுவிற்கு இந்த சட்டத்தரணி கசியவிட்டுள்ளார். இதன் காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தில், கரன்தெனிய சுத்தவின் திட்டமிடலின் கீழ் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
சம்பவம் நடந்த போது, காரில் வந்த ஒரு மர்மக் கும்பல் டி-56 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி சுமார் 10 முறை சரமாரியாகச் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளது. இந்தத் தாக்குதலில் காரில் பயணம் செய்த சட்டத்தரணியும் அவரது மனைவியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சட்டத்துறையைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது கண்டனத்தையும் கவலையையும் தெரிவிக்கும் வகையில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
_____________________________________________________________________________________________________________________
Ten specialized police teams, including CID and STF, are investigating the brutal double murder of a lawyer and his wife in Akuregoda. Authorities suspect the attack was orchestrated by underworld figure ‘Karandeniya Suttha’ using a T-56 rifle, allegedly because the lawyer shared sensitive information with a rival gang leader known as ‘Loku Petti’.