அதிவேக நெடுஞ்சாலையில் அதிசொகுசு வாகனம்: விசாரணை தொடர்கிறது
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் அபரெக்க மற்றும் பெலியத்த பகுதிகளுக்கு இடைப்பட்ட 140 கிலோமீட்டர் மையில் கல் அருகே சந்தேகத்திற்குரிய வாகனம் ஒன்று நிற்பதாக வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அங்கு சென்ற அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துப் பொலிஸார், அந்த வாகனத்தைக் கைப்பற்றி மேலதிக விசாரணைகளுக்காக திஹகொட பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட வாகனத்தின் இலக்கத் தகட்டைச் சோதித்தபோது, அதே இலக்கத்தைக் கொண்ட மற்றுமொரு வாகனம் இரத்தினபுரியைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. இருப்பினும், […]