Skip to main content

Super Tamils

அதிவேக நெடுஞ்சாலையில் அதிசொகுசு வாகனம்: விசாரணை தொடர்கிறது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் அபரெக்க மற்றும் பெலியத்த பகுதிகளுக்கு இடைப்பட்ட 140 கிலோமீட்டர் மையில் கல் அருகே சந்தேகத்திற்குரிய வாகனம் ஒன்று நிற்பதாக வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அங்கு சென்ற அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துப் பொலிஸார், அந்த வாகனத்தைக் கைப்பற்றி மேலதிக விசாரணைகளுக்காக திஹகொட பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட வாகனத்தின் இலக்கத் தகட்டைச் சோதித்தபோது, அதே இலக்கத்தைக் கொண்ட மற்றுமொரு வாகனம் இரத்தினபுரியைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. இருப்பினும், […]

Read More

போதைப்பொருள் அடிமை மகன்: தந்தை செய்த அதிர்ச்சி செயல்

பொலனறுவையில் இளைஞர் ஒருவர் அவரின் தந்தையாரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பொலனறுவை, மெதிரிகிரியை பிரதேசத்தில் நேற்று (25) இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு தனது தந்தையால் கொல்லப்பட்டவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட இளைஞர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தனது தந்தையுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு, வீட்டில் தொடர்ந்து பல குழப்பங்களை விளைவித்து வந்துள்ளார். இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், அது […]

Read More

கள்ளக்காதல் விவகாரம்: ஓட்டலில் மனைவி கையும் களவுமாக பிடிப்பு

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியில், திருமணமான மூன்று மாதங்களுக்குள்ளேயே ஒருவர் தனது மனைவியை கள்ளக்காதலனுடன் ஓட்டலில் கையும் களவுமாக பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தம்பதியினர் மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த சில நாட்களாக தனது மனைவியின் நடத்தையில் மாற்றங்கள் தெரிவதை கணவர் கவனித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று, மனைவி தனது அலைபேசியில் பகிர்ந்த ‘லைவ் லொக்கேஷன்’ (Live Location) உதவியுடன், அவர் ஒரு ஹோட்டலில் இருப்பதை […]

Read More

தனிமையில் இருப்பவர்களை கண்காணிக்கும் செயலி: சீனாவின் புதிய முயற்சி

மக்களின் தேவைகளை உணர்ந்து விதவிதமாகவும் விநோதமாகவும் செயலிகள் உருவாக்குவது இணைய உலகில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த அடிப்படையில், தனியாக வசிக்கும் நபர்களின் பாதுகாப்பைக் கண்காணிக்கும் நோக்கில் ‘Are You Dead’ எனும் புதிய செயலி சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் செயலியைப் பயன்படுத்தும் நபர்கள், தாங்கள் நலமுடன் இருப்பதை உறுதி செய்ய இதில் உள்ள ஒரு பிரத்யேக பொத்தானை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அழுத்த வேண்டும். ஒருவேளை பயனர் அந்தப் பொத்தானை அழுத்தத் தவறினால், அவர் […]

Read More

இந்து இளைஞர் உயிருடன் எரித்துக் கொலை: வெளிநாட்டில் அதிர்ச்சி

பங்களாதேஷில் இளைஞர் ஒருவர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது. பங்களாதேஷின் குமிலா மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமிபூர் கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர், நர்சிங்டி பகுதியில் உள்ள ஒரு கடையில் தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு வேலை முடிந்ததும், அவர் வழக்கம்போல அந்தக் கடையிலேயே உறங்கியுள்ளார். நள்ளிரவில் அந்தக்கடை திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கடைக்குள் இருந்து கருகிய நிலையில் அந்த […]

Read More

சாணம் பூசி அரைநிர்வாண ஊர்வலம்: பரபரப்பு சம்பவம்

திருமணமான ஆணுடன் சென்றதாகக் கூறி, 35 வயது விதவைப் பெண் ஒருவரை ஒரு கும்பல் அரை நிர்வாணப்படுத்தி, ஊர் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பென்ட்ரா மாவட்டத்தில் இந்த மனிதாபிமானமற்ற செயல் அரங்கேறியுள்ளது. கணவரை இழந்த பெண் ஒருவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமான நபர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இதன் காரணமாக இருவரும் ஊரை விட்டு வெளியேறி, அண்டை மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் வசித்து […]

Read More

உலக சந்தையில் தங்கம் வரலாற்று உச்சம்

வரலாற்றில் முதல் முறையாக உலக சந்தையில் தங்கத்தின் விலை 5,000 அமெரிக்க டொலர் எல்லையை கடந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,024.95 அமெரிக்க டொலர்கள் வரை உயர்ந்து புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தங்கத்தின் இந்த விலை உயர்வு இத்துடன் நின்றுவிடாது என்றும், இந்த ஆண்டு முடிவதற்குள் ஒரு அவுன்ஸ் தங்கம் 5,500 டொலர்களைத் தாண்டிவிடும் என்றும் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். தங்கத்தின் விலையேற்றத்தைப் பின்பற்றி மற்ற […]

Read More

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

வளிமண்டலவியல் திணைக்களம் வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளில் இன்று மதியத்திற்கு பிறகு பரவலாக மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மதியம் 2 மணிக்குப் பிறகு இந்த நிலை ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை […]

Read More

15 வயது பணிப் பெண்ணுக்கு கொடூரம்: பகீர் தகவல் வெளியீடு

வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 37 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2026.01.18 அன்று பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். இந்த சம்பவத்தில் மலையகப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது கல்முனை பகுதியிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை […]

Read More

T-56 ரக துப்பாக்கியுடன் காரை கைவிட்ட சந்தேகநபர் கைது

ராகம பகுதியில் கார் ஒன்றில் T-56 ரக துப்பாக்கியை விட்டுவிட்டு தப்பிச் சென்ற விவகாரத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியும், அவருக்கு உடந்தையாக இருந்தவரும் ஒரு மாத காலத்திற்குப் பிறகு தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் நடத்திய தீவிர விசாரணையின் பலனாக இந்த அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சோதனையின் போது, வத்தளை ஒலியமுல்ல பகுதியில் வைத்து பிரதான சந்தேகநபர் 20 கிராம் 520 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பிடிபட்டார். […]

Read More