Skip to main content

Super Tamils

கடன் அட்டை பயனர்களே கவனம்…! வெளியான முக்கிய அறிவிப்பு.

இலங்கையில் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் கடன் அட்டைகளுக்கான வட்டி வீதத்தை 1 முதல் 3 சதவீதம் வரையான தொகையினால் அதிகரிப்பதற்கு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தீர்மானித்துள்ளன. தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்த புதிய முடிவால் இலங்கையில் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் சுமார் 22 லட்சம் வாடிக்கையாளர்கள் நேரடியாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தங்களின் அன்றாட அத்தியாவசியத் தேவைகளைக் கூட சமாளிக்க முடியாமல் பலரும் இந்த கடன் […]

Read More

அதிர்ச்சி சம்பவம்…!குடும்பத் தகராறில் மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவன்.

மொனராகலை, கொடிகமுவ முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை வேளையில் இவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டுள்ளது. கடுமையான தீக்காயங்களுடன் பியகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். பிபில, கொடிகமுவ முஸ்லிம் பகுதியைச் சேர்ந்த ரினோஷா உம்மா என்ற 4 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்தவராவார். உயிரைப் பறித்த தீ வழக்கம் போல அன்றைய தினமும் […]

Read More

அமைதியை நோக்கி புதிய நகர்வு…! போர்நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்த ஐரோப்பா

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் இடையே போர் நிறுத்தத்தை உறுதி செய்வதற்காக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முன்மொழிவை ஐரோப்பிய தலைவர்கள் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த அமைதி முயற்சியில் ஐரோப்பிய நாடுகள் மிக முக்கிய பங்காற்றப் போவதாக பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிரித்தானிய நாட்டுத் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் முழுமையான பங்களிப்போடு, உக்ரைனும் ரஷ்யாவும் நேரடியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும், இதன் மூலம் இந்த கொடூரப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் […]

Read More

பல கோடி மதிப்புள்ள 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு கரப்பான் பூச்சிகள் பறிமுதல்!

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள ஒரு வணிகப் பண்ணையில், சட்டத்திற்குப் புறம்பான முறையில் வளர்க்கப்பட்டு வந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு கரப்பான் பூச்சிகளை அந்நாட்டு அரசு அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட இந்த பூச்சிகளின் சந்தை மதிப்பு சுமார் 2,00,000 ஆஸ்திரேலிய டாலர்கள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழல் மற்றும் விண்வெளி வரலாற்றிலேயே, முதுகெலும்பில்லாத ஒரு உயிரினம் இந்த அளவிற்கு மிக பிரம்மாண்டமான எண்ணிக்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் […]

Read More

“பாடகர் சங்கீதனின் விடுதலைக்காக உயர்நீதிமன்றத்தை நாடும் சட்டத்தரணி”

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளம் தமிழ் பாடகரான கணேஷ்குமார் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய, உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவிற்கான முக்கிய ஆவணங்கள் மற்றும் சத்தியக்கடதாசிகளில் சங்கீதனிடம் கையெழுத்து வாங்கப்பட்டிருப்பதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அத்தோடு, இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை மிக விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். […]

Read More

மத்திய கிழக்கில் பதற்றம் உச்சம்…!அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தொடர்ச்சியான பதற்றமான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியில் வசிக்கும் மற்றும் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கர்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் தங்கியிருக்கும் மற்றும் அங்கு பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள அமெரிக்க குடிமக்கள், தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. அங்குள்ள அமெரிக்க தூதரகங்கள் விடுத்துள்ள பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிப்புகளிலும் இந்த விவகாரம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் […]

Read More

தடைசெய்யப்பட்ட காட்டின் உள்ளே கண்டுபிடிக்கப்பட்ட புதிய மர்ம உலகம்!

ஆப்பிரிக்காவின் மிக முக்கியமான, மனிதர்களால் அதிகம் தீண்டப்படாத இயற்கை மண்டலங்களில் ஒன்றாகக் கருதப்படுவது கிழக்கு அங்கோலாவில் உள்ள ‘லிசிமா’  பீடபூமி பகுதி ஆகும். இங்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பிரம்மாண்ட அறிவியல் ஆய்வுப் பயணத்தின் போது, இதுவரை மனித இனமே பார்த்திராத பல நூதனமான, விசித்திரமான புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கடந்த புதன்கிழமை (03) அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். காங்கோ, ஜாம்பேசி மற்றும் ஒகவாங்கோ போன்ற ஆப்பிரிக்காவின் மிக முக்கியமான நதிகளுக்கு நீராதாரமாக விளங்கும் […]

Read More

எச்சரிக்கை : வாட்ஸ்அப் வலையில் சிக்கிய 14 சிறுவர்கள்!

இலங்கையில் இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 360 ஆன்லைன் பண மோசடிகள் நடந்துள்ளதாக கம்ப்யூட்டர் அவசரப் பிரிவு (CERT) எச்சரித்துள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் மக்கள் எந்தளவுக்குப் பெரிய ஆபத்துக்களை எதிர்கொண்டு வருகிறார்கள் என்பதைத் தான் இந்தத் தரவுகள் நமக்குக் காட்டுகின்றன. இலங்கை கணினி அவசரப் பிரிவின் முக்கிய தகவல் பாதுகாப்பு பொறியியலாளரான சாருக தமுனுபொல இந்த அதிர்ச்சிகரமான தகவலைப் பகிர்ந்துள்ளார். இதில் கொடுமை என்னவென்றால், பதிவாகியுள்ள ஒட்டுமொத்த மோசடிகளில் 14 சம்பவங்கள் சிறுவர்களை குறிவைத்து நடத்தப்பட்டவை […]

Read More

உடல்களை மறைக்க உதவியவர் சிக்கினார்…! இலங்கையில் அதிரவைத்த கொலை வழக்கு!

சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர், 2020 கொவிட் தொற்று காலப்பகுதியில் கிராண்பாஸ் பகுதியில் தம்பதியினரை படுகொலை செய்து, உடல் பாகங்களை கால்வாய் ஒன்றில் புதைத்த சம்பவத்தில் குற்றச்செயலுக்கு உதவி ஒத்தாசை புரிந்த சந்தேகநபர் ஒருவர் போதைப்பொருளுடன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டில் கிராண்ட்பாஸ், கம்பிகொட்டுவத்த பகுதியில் வசித்துவந்த சுனில் குமாரசிங்க மற்றும் அவரது மனைவியான குமுது டி சில்வா ஆகிய இருவரையும் திடீரென காணவில்லை. இது தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் […]

Read More

தோண்டும் போதெல்லாம் அதிர்ச்சி..! யாழில் தொடர்ந்து கிடைக்கும் மண்டையோட்டுகள்.

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது, சிறுவர்களினது எனப் பலத்த சந்தேகிக்கப்படும் 4 எலும்புத் தொகுதிகள் உட்பட புதிதாக மேலும் 5 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. செம்மணி பகுதியில் உள்ள மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், 15ஆவது நாள் அகழ்வு நடவடிக்கைகள் நேற்று புதன்கிழமை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, தடயவியல் நிபுணர்களின் நேரடி மேற்பார்வையில் […]

Read More