Skip to main content

Super Tamils

பெண் செய்த மோசடி: மடக்கிப்பிடித்த பொலிஸார்

பெண்ணை ஏமாற்றி, ஒரு கணக்கிற்கு பெருந்தொகை பணத்தை மாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. விசாரணை. கைது செய்யப்பட்ட பெண் ராஜகிரிய, கொஸ்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தப் பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், பாதிக்கப்பட்ட […]

Read More

1.5 கிலோ ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்: இருவர் கைது

1 கிலோ 501 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களை மாதம்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (22) அதிகாலை மாதம்பிட்டிய பகுதியில் உள்ள ‘சத்ஹிரு செவன’ அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் முச்சக்கரவண்டி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதனைச் சோதனையிட்ட பொலிஸார், அங்கிருந்த இருவரிடமிருந்து பெருமளவிலான ஐஸ் போதைப்பொருளைக் கைப்பற்றியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வெள்ளம்பிட்டிய மற்றும் கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த 24 மற்றும் 29 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். […]

Read More

IMF பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (22) இலங்கை வருகை தரவுள்ளது. ‘டித்வா’ (Ditwa) புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்யவும், அது குறித்து அதிகாரிகளுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தவும் இந்த நிபுணர் குழு இலங்கை வருவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இன்று நாட்டை வந்தடையும் இந்தப் பிரதிநிதிகள் குழுவினர், எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து தமது பணிகளை முன்னெடுக்க உள்ளனர். புயல் அனர்த்தத்தினால் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் […]

Read More

கனேடிய நாடாளுமன்றத்தில் யாழ் மண்ணின் மைந்தர்கள்

இலங்கையின் வளர்ந்து வரும் ராப் இசைகலைஞரான வாகிசன் இராசையா உள்ளிட்ட குழுவினர் கனடா நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளதுடன் அங்கு இடம்பெற்ற பொங்கல் விழாவிலும் பங்கேற்றுள்ளதுடன் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி உள்ளிட்ட பலரை சந்தித்துள்ளனர். பெரும் வரவேற்ப்பு. சமீபகாலமாக எங்கு பார்த்தாலும் யாழ் மண்ணின் மைந்தன் வாகீசனின் சொல்லிசைப் பாடல்கள் பெரும் அதிர்வை ஏற்படுத்தி வருகின்றன. தமிழ் மொழியைத் தனது அடையாளமாகக் கொண்டு மெட்டிசைக்கும் இந்தக் கலைஞர், கனடா நாடாளுமன்ற நிகழ்வில் பங்கேற்றிருப்பது உலகத்தமிழர்கள் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை […]

Read More

வனப்பகுதியில் மர்ம துப்பாக்கிச் சூடு: விவசாயி பலி

அநுராதபுரத்தில் மதவாச்சி – கரம்பன்குளம் வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை. நேற்று புதன்கிழமை (21) இரவு இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் உயிரிழந்தவர் மதவாச்சி – துமின்னேகம பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய விவசாயி என அடையாளம் காணப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அந்த விவசாயியை மதவாச்சி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, கரம்பன்குளம் காட்டுப்பகுதிக்கு […]

Read More

குடும்ப கொடுமை: வயோதிப தாயை கொடூரமாக தாக்கிய இளைய மகன்

இரத்தினபுரியில் பலாங்கொடை, மஸ்ஸென்ன பிரதேசத்தில் தாய் இளைய மகனால் கொடூரமாக தாக்கப்பட்டு காயமடைந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணை. தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த தாய், தற்போது சிகிச்சைக்காக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட இந்தத் தாய்க்கு 52 வயது என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்துத் தெரியவந்ததும் ஆத்திரமடைந்த மூத்த மகன், சந்தேக நபரான தனது இளைய சகோதரனைத் தாக்கியுள்ளார். இதில் அந்த இளைய மகனும் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் […]

Read More

யாழின் பிரபல சுற்றுலாத்தளம்: சமூக சீரழிவின் மையமாக மாறும் அதிர்ச்சி

வேலணை மண்டைதீவு சுற்றுலாத்தளத்தை சமூக சீரழிவின் மையமாக உருவெடுத்து வரும் சமூக விரோத செயற்பாடுகளின் பிடியிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்தியுள்ளார். வேலணை மண்டைதீவு சுற்றுலாத்தளம் குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இப்பகுதியின் வளர்ச்சியை நோக்காகக் கொண்டும், சுற்றுலாவை மேம்படுத்தவும் கடந்த 2016 ஆம் ஆண்டு சுமார் 77 மில்லியன் ரூபாய் செலவில் சுற்றுலா அமைச்சினால் இந்த மையம் உருவாக்கப்பட்டது. இருப்பினும், முறையான மேலாண்மை […]

Read More

தேசிய கண் வைத்தியசாலையில் இன்று பணிப்புறக்கணிப்பு

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று (22) முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்படும் இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் இன்று காலை 8 மணி முதல் இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் சமில் விஜேசிங்க அறிவித்துள்ளார். இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் இன்றும் […]

Read More

மனைவியை மரத்தில் கட்டி மிளகாய் பொடி தூவி தாக்கல்

மனைவியை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்ததாக கூறப்படும் கடற்படை சிப்பாயை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் மேலதிக நீதவான் டி.எல். சமரசிங்க உத்தரவிட்டுள்ளார். அநுராதபுரம் பரசன்கஸ்வெவ பகுதியில் மிகக் கொடூரமான இச்சம்பவம் பதிவாகியுள்ளது. தனது மனைவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், குறித்த சிப்பாய் தனது மனைவியை ஒரு மரத்தில் கட்டி வைத்து, அவர் மீது மிளகாய்த் […]

Read More

காதல் மனைவியால் புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம்: உயிரிழப்பு

நண்பர்களை பார்க்க செல்வதை மனைவி தடுத்ததால் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து கடந்த மாதம் தான் கரம் பிடித்துள்ளார். இவர்களது மணவாழ்க்கை தொடங்கி ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், இந்த விபரீத முடிவு அரங்கேறியுள்ளது. சம்பவம் நடந்த அன்று, தனது நண்பர்களைச் சந்திக்கச் செல்வதாக […]

Read More