Skip to main content

Super Tamils

நாளை மோதல்… குஜராத்-ராஜஸ்தான் அணிகள் : 2-வது தகுதிச்சுற்று

நேற்று நடந்த எலிமினேட்டர் (வெளியேறுதல் சுற்று) போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. நியூ சண்டிகார், ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இப்போது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆப் சுற்றுகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் நடந்த முதலாவது குவாலிபையர் போட்டியில் குஜராத் அணியை தோற்கடித்து பெங்களூரு அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று நடைபெற்ற வாழ்வா-சாவா எலிமினேட்டர் ஆட்டத்தில் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் […]

Read More

டிரம்பின் அடுத்த அதிரடி…! இரான் மீது நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்: பதறவைக்கும் பின்னணி.

அமெரிக்க ராணுவம் இரான் மீது மீண்டும் ஒருமுறை வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் நடவடிக்கைகள் அனைத்தும் “குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டவை, முழுக்க முழுக்க தற்காப்புக்காக நடத்தப்பட்டவை மற்றும் போர் நிறுத்தத்தை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டவை” என்று அமெரிக்கத் தரப்பு தெரிவித்துள்ளது. “ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் அச்சுறுத்தலாக விளங்கிய” இரானின் நான்கு ஒருவழித் தாக்குதல் ட்ரோன்களை அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, ஐந்தாவது ட்ரோன் ஒன்றை ஏவுவதற்குத் தயாராக இருந்த, […]

Read More

டிக்கோயா இரட்டைக் கொலை சந்தேகநபர் தப்பியோட்டம்…!பொதுமக்களின் உதவியை நாடுகிறது பொலிஸ்.

டிக்கோயா இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர், பொலிஸ் காவலில் இருந்து சாமர்த்தியமாகத் தப்பியோடியுள்ளார். கண்டி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அந்த நபர், இன்று (27) அதிகாலை வேளையில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். கடந்த 21ஆம் திகதி ஹட்டன் – டிக்கோயா நகர்ப் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலைய குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த வயதான தம்பதியினர், கூரிய ஆயுதங்களால் மிகக் […]

Read More

அனுராதபுரத்தில் பௌத்த பிக்குவினால் பாதிக்கப்பட்ட சிறுமி! அமைச்சர் வெளியிட்ட கடுமையான அறிவிப்பு

அனுராதபுரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்பில் அவதூறான கருத்துக்களை வெளியிட்ட நபர் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும். இது குறித்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விபரம் வெளியிடப்பட்டது. அங்கு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர், இச்சம்பவம் குறித்து மேலும் சில முக்கிய விபரங்களைப் பகிர்ந்துகொண்டார். பெற்ற மகளையே தேரருக்கு […]

Read More

புதிய போக்குவரத்து அபராத முறை…!அலட்சியம் காட்டும் பொலிஸாருக்கு எச்சரிக்கை.

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை சம்பவ இடத்திலேயே GovPay செயலி மூலம் செலுத்துவதற்கு வாகன ஓட்டிகளுக்கு வசதி செய்து கொடுக்காத போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புக்கான பிரதிப்பொலிஸ் மா அதிபர் டப்ளியூ பீ.ஜே. சேனாதீர எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் பகிர்ந்து கொண்ட விபரங்கள் இதோ: இதற்கு முன்பு, வாகன ஓட்டிகள் தங்களின் போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்காக நீண்ட நேரம் அலைந்து திரிந்து, […]

Read More

ஒன்றா? இரண்டா?…! தயிர் மற்றும் யோகர்ட் இடையே உள்ள அசல் வேறுபாடு தெரியுமா?

வீட்டுச் சமையலறைகளில் எப்போதும் இடம்பிடித்திருக்கும் ஒரு பாரம்பரிய உணவுப் பொருள் தான் தயிர். ஆனால், கால ஓட்டத்தில் சூப்பர் மார்க்கெட் அலமாரிகளை அலங்கரிக்கும் கப்களிலும் பாக்கெட்டுகளிலும் அடைக்கப்பட்ட யோகர்ட்டும் நம்முடைய அன்றாட உணவின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இப்போது வீட்டில் தயாரிக்கப்படும் தயிருடன், கடைகளில் வாங்கும் யோகர்ட்டும் நம் வீடுகளுக்குள் வந்துவிட்டது. இங்குதான் பலருக்கும் ஒரு சின்ன சந்தேகம் எழுகிறது. வீட்டுத் தயிரும், கடைகளில் கிடைக்கும் யோகர்ட்டும் ஒன்றுதானா? அல்லது இரண்டுக்கும் இடையில் ஏதேனும் வித்தியாசங்கள் இருக்கின்றனவா? […]

Read More

வரலாறு படைத்த ஆர்சிபி… குஜராத்தின் சாதனையை உடைத்து அசத்தல்…

இறுதிப்போட்டிக்கு பெங்களூரு அணி முன்னேறியது…. தர்மசாலா, ரசிகர்களைக் குஷிப்படுத்தி வரும் 19-வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் திருவிழா இப்போது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் களம் கண்ட இந்தத் தொடரில், லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (18 புள்ளிகள்), குஜராத் டைட்டன்ஸ் (18 புள்ளிகள்), ஐதராபாத் சன்ரைசர்ஸ் (18 புள்ளிகள்) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (16 புள்ளிகள்) ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்குத் […]

Read More

விசேட விடுமுறை தொடர்பாக அரசு வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்கள்…!

அரசாங்க வெசாக் தினத்தை முன்னிட்டு வரும் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையை அரசு விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ வர்த்தமானி அறிவிப்பை பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன வெளியிட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 30ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவின்படி, மே 27ஆம் திகதி முதல் ஜூன் 02ஆம் திகதி வரையிலான வாரத்தை வெசாக் வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, இன்று (மே 27) தொடக்கம் ஜூன் மாதம் 2ஆம் […]

Read More

மனிதநேயத்தை நினைவூட்டிய நீதிபதி…! அதிர்ச்சியில் நீதிமன்றம்

வேடநத்தம் பள்ளி மாணவி கொலை வழக்கில் குற்றவாளி தர்மமுனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து தமிழகத்தின் போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா தீர்ப்பளித்தார். விளாத்திகுளம் பகுதியில் நடந்த கொடூரம்: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே இருக்கும் வேடநத்தம் கிராமத்தின் காட்டுப்பகுதியில், கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதியன்று 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி சடலமாக கண்டெடுக்கப்பட்டாள். இந்த அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்துவதற்காக, காவல்துறை தரப்பில் உடனடியாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. […]

Read More

உலக கவனத்தை ஈர்த்த அமெரிக்காவின் திடீர் தாக்குதல்…!

தெற்கு ஈரான் பகுதியில் அமெரிக்க ராணுவம் திடீரென அதிரடித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே போர்நிறுத்தம் நடைமுறையில் இருப்பதோடு, பதற்றத்தைத் தணித்து போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வரும் சூழலில் இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது. ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமைந்திருக்கும் ஈரானிய ஏவுகணை ஏவுதளங்களையும், அவர்களது படகுகளையும் இலக்கு வைத்து, தங்களை தற்காத்துக் கொள்வதற்காகவே இந்த அதிரடித் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க மத்திய […]

Read More