Skip to main content

Super Tamils

வீட்டில் இரு பெண்கள் மீது ஆயுதத் தாக்குதல்

அஹங்கம பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்த நபர் ஒருவர், அங்கிருந்த இரண்டு பெண்களைக் கூரிய ஆயுதங்களால் மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இது குறித்துத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அஹங்கம பொலிஸார், இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர். இருப்பினும், வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் கிடைக்காமல் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவர் 80 வயதுடைய முதியவர் எனத் தெரியவந்துள்ளது. மற்றொரு பெண்ணிற்குத் தொடர்ந்து சிகிச்சை […]

Read More

கொஹுவல துப்பாக்கிச் சூடு; மேலும் மூவர் கைது

கடந்த 30ஆம் திகதி இரவு கொஹுவல, போதியத்த பகுதியில் வீடொன்றுக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுமி காயமடைந்த சம்பவத்திற்கு, உதவி மற்றும் ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொஹுவல பகுதியில் 16 வயது சிறுமி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த சம்பவம் தொடர்பில், அதற்கு உடந்தையாக இருந்த மேலும் மூவரை பொலிஸார் தற்போது வலைவீசிப் பிடித்துள்ளனர். கொஹுவல […]

Read More

பால் தேநீர் விலை குறைப்பு தீர்மானம்

இன்று (16) இரவு முதல் அமுலாகும் வகையில் ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 10 ரூபாயினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளதால், அதன் பலனை மக்களுக்கும் வழங்கும் வகையில் பால் தேநீர் விலையை குறைக்க முடிவு செய்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷ ருக்ஷான் குறிப்பிட்டுள்ளார். எனவே, நாட்டில் உள்ள அனைத்து உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை […]

Read More

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (16) சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்பார்க்கப்படுவதாக இன்று அதிகாலை விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய தினம் நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழையற்ற, ஒரு தெளிவான வானிலையை மக்கள் எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், தெற்கே காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரத்தில் பனிமூட்டமான சூழல் நிலவக்கூடும். எனவே, […]

Read More

தமிழர் பகுதியில் லட்சக்கணக்கான ஆபத்தான பொருள் மீட்பு

புத்தளம், கற்பிட்டி, கந்தகுளிய கடற்கரை பகுதியில் போதைமாத்திரைகள் அடங்கிய இரண்டு பொதிகள் இலங்கை கடற்படையினரால் (12) கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த பாரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு பொதிகளுக்குள் இருந்து மொத்தம் 108,480 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. கடற்படையினரின் தீவிர கண்காணிப்பு காரணமாக, கடத்தல்காரர்கள் இந்தப் பொதிகளை நாட்டிற்குள் கொண்டு செல்ல முடியாமல் பயந்துபோய் கடற்கரையிலேயே கைவிட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட இந்த […]

Read More

Helper boy work

வேலைவாய்ப்பு – Helper boy பொருட்கள் தூக்கி கொடுக்க helper  வேலைக்கான நபர் தேவை. சம்பளம்: ரூ.  45000 + தினசரி சாப்பாட்டு காசு ரூ. 300/- வழங்கப்படும். இடம்: யாழ்ப்பாணம், கொக்குவில் தகுதி: •அனுபவம் உள்ளவர்கள் முன்னுரிமை •பொறுப்புடன், நேர்மையாக வேலை செய்யக்கூடியவர் தொடர்பு எண்: 077 343 4012

Read More

waiter vacancy

உடனடி வேலை வாய்ப்பு 🚨 Dine n me restaurant Vavuniya Branch இல் waiter (Boys)வேலைக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன … தகமை(O/L&A/L) Hotel management Salary:45000/= விருப்பம் உடையவர்கள் தொடர்புகளுக்கு (0242225666,0777273592) WhatsApp 0777273592

Read More

கணவன் முன்னிலையில் மனைவி உயிரிழப்பு ; சொந்த நிலத்தில் நடந்த சோகம்

பொலன்னறுவை, சிறிபுர கலுகெலே வெலிய பகுதியில் நேற்று (13) காட்டு யானை தாக்குதலுக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவத்தில் குறித்த பெண்ணின் கணவர் படுகாயமடைந்த நிலையில் தெஹியத்தகண்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். தம்பதியினர் இருவரும் தங்களுக்குச் சொந்தமான வயலுக்குச் சென்றிருந்த போதே, எதிர்பாராத விதமாக அங்கு வந்த காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்துப் பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். A […]

Read More

யாழில் அநுரவின் வருகையை கண்ணீருடன் எதிர்பார்க்கும் தாய்

எமது பூர்வீக காணியை கடற்படையினர் நிரந்தரமாக சுவீகரிக்க முயற்சித்துள்ளனர். அந்த காணியையே மகளுக்கு சீதனமாக கொடுக்க இருக்கிறேன். எனவே எனது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டாவது எமது காணியை எம்மிடமே ஒப்படைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாயார் ஒருவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். எழுவைதீவு பகுதியில் கடற்படையினரின் முகாம் அமைந்துள்ள தனியார் காணியை நிரந்தரமாகத் கையகப்படுத்த கடற்படையினர் முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக வரும் 20ஆம் திகதி காணி அளவீட்டுப் பணிகள் நடக்கவுள்ள நிலையில், […]

Read More

இலங்கை விடுதியில் வெளிநாட்டு தொழிலதிபரின் மனைவிக்கு நேர்ந்த துயரம்

நீர்கொழும்பு பகுதியில் உள்ள பிரபல விடுதி ஒன்றின் கட்டடத்தில் இருந்து கீழே வீழ்ந்து 26 வயதுடைய சுவீடன் நாட்டுப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்கொழும்பு பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபல ஹோட்டலில் தங்கியிருந்த போதே இந்தச் சோகச் சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பெண் விடுதியின் 9ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணை பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த அந்தப் பெண் திருமணமானவர் என்பதும், அவரது கணவர் ஒரு தொழிலதிபர் […]

Read More