Skip to main content

Super Tamils

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும், வவுனியா மாவட்டத்திலும் அதிகாலை நேரங்களில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதிகாலை வேளையில் பயணங்களை மேற்கொள்வோர் இது குறித்து அவதானமாக இருப்பது அவசியமாகும். நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் பொதுவாக அமைதியான மற்றும் தெளிவான வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏதுமின்றி சீரான சூழலே காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. கடற்பரப்புகளில் […]

Read More

இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி மாயம்; தேடுதல் தீவிரம்

லுனுகம்வெஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்நிலையில் படகு கவிழ்ந்ததில் இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். படகொன்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்கள் பதவிகம பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இரு சிறுவர்கள் ஆவர். இளைஞர்களைத் தேடும் பணியில் பொலிஸாருடன் இணைந்து கடற்படை மற்றும் முப்படையினரின் சுழியோடிப் பிரிவினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ________________________________________________________________________________________________________________________________________________ […]

Read More

அமெரிக்க போர் கப்பல் தாக்கப்பட்டதா?; ஈரான் பதிலடி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானும் வளைகுடா நாடுகள் மீது தீவிரத் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்தத் தாக்குதல்களில் அமெரிக்காவின் 17 ராணுவத் தளங்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும், வளைகுடா கடற்பகுதியில் செல்லும் எண்ணெய் கப்பல்களையும் ஈரான் குறிவைத்துள்ளது. வளைகுடா பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘ஆபிரகாம் […]

Read More

Ali Khamenei கொலை விவரம்?; கடைசி நொடிகள், அமெரிக்க இரகசிய திட்டம்

உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள ஈரான் மதகுரு கமேனியின் மரணத்திற்குப் பின்னணியில் உள்ள தாக்குதல் திட்டம் குறித்த ரகசியத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. மிகுந்த பாதுகாப்பிற்கு மத்தியில் ரகசிய இடத்தில் வாழ்ந்து வந்த கமேனியை, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறையினர் நீண்ட நாட்களாகக் கண்காணித்து வந்தனர். அணு ஆயுத மோதல் காரணமாக ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டிருந்த நிலையில், கமேனி கலந்துகொண்ட முக்கியக் கூட்டம் ஒன்றே இத்தாக்குதலுக்கு வாய்ப்பாக அமைந்தது. ஈரான் அதிபர் மற்றும் ராணுவ அதிகாரிகள் […]

Read More

எரிபொருள் பெயரில் ஆபத்தான செயல்; பொலிஸார் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என அஞ்சி, பொதுமக்கள் தேவையின்றி எரிபொருளைச் சேமிக்க வேண்டாம் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளதால், பொதுமக்கள் வீணாக அச்சப்படத் தேவையில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கொள்கலன்கள் அல்லது போத்தல்களில் எரிபொருள் விநியோகிப்பதைத் தவிர்க்குமாறு அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், கடற்றொழில், விவசாயம் மற்றும் […]

Read More

யாழில் இரு பெண்களுடன் 11 பேர் கைது; பகீர் பின்னணி

போதைப்பொருள் கடத்தல் மற்றும் தொடர்ச்சியான கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 13 சந்தேக நபர்களை யாழ்ப்பாணப் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவர். இந்தக் கும்பலில், யாழ் நகரில் உள்ள மருந்தகம் ஒன்றை உடைத்து இரண்டு இலட்சம் ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசியைத் திருடிய ஒருவரும், நெடுங்குளம் பகுதியில் வீடு புகுந்து நான்கரை இலட்சம் ரூபாவைக் கொள்ளையடித்த இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் மூன்று பேரைத் தேடி […]

Read More

கொழும்பு போர்ட் சிட்டி கடலில் இளைஞர் சடலம் மீட்பு

கொழும்பு துறைமுக நகரக் கடலில் சடலமொன்று மிதப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, துறைமுகப் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று அதனை மீட்டெடுத்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வல்வெட்டித்துறைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர் கடந்த 28ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக அங்கு வந்திருந்தவர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மரணம் தொடர்பான மேலதிக உண்மைகளைக் கண்டறிய கொழும்பு துறைமுகப் பொலிஸார் தீவிர […]

Read More

டெங்கு தீவிரம்; 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் கவனம்

நாட்டில் டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் டாக்டர் பிரஷிலா சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய நிலவரப்படி கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தான் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி போன்ற மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்குமாறு […]

Read More

இன்றைய வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்று பொதுவாகவே நல்ல வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், அதோடு அனுராதபுரம், வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பனிமூட்டம் காணப்பட வாய்ப்புள்ளது. கடல் சார்ந்த வானிலையை பொறுத்தவரை, நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் பெரும்பாலும் மழை இல்லாத தெளிவான வானிலையே நிலவும். காற்றின் திசையானது அவ்வப்போது மாறுபட்டு வீசக்கூடும். கடற்பரப்புகளில் காற்றின் வேகம் ஒரு மணித்தியாலத்திற்கு 20 […]

Read More

விவாகரத்துக்கு நடிகை காரணமா? விஜய் குறித்து சங்கீதா தகவல்

பிரபல நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் குடும்ப வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் பரபரப்புச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. நீண்ட நாட்களாகப் பேசப்பட்டு வந்த இந்த விவகாரம் இப்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்த விவாகரத்து முடிவுக்குக் காரணம், விஜய்க்கும் ஒரு பிரபல நடிகைக்கும் இடையே இருக்கும் திருமணத்தை மீறிய உறவுதான் என்று சங்கீதா […]

Read More