Skip to main content

Super Tamils

வாழைப்பழம் கோரி தாக்கப்பட்ட இந்து தொழிலதிபர்; வெளிநாட்டில் பயங்கரம்

பங்களாதேஷில் வாழைப்பழம் தொடர்பான தகராறில் இந்து தொழிலதிபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

பங்களாதேஷின் காஜிப்பூர் மாவட்டம், காளிகஞ்ச் பகுதியில் நேற்று இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர் லிட்டன் என்ற இந்து தொழிலதிபர் ஆவார். தனது வாழைப்பழத் தோட்டத்தில் இருந்து ஒரு தார் வாழைப்பழம் காணாமல் போனதால், மாசூம் மியா என்பவர் அதனைத் தேடி வந்துள்ளார். அப்போது லிட்டனின் உணவகத்தில் காணாமல் போன வாழைப்பழங்கள் இருந்ததாகக் கூறி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், மாசூம் மியா, அவரது தந்தை சுவபன் மியா (55) மற்றும் அவரது தாய் ஆகியோர் இணைந்து லிட்டனை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த லிட்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
जिपको ठक्करबाट वृद्धको मृत्यु

இந்தக் கொலை தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். பங்களாதேஷில் அண்மைக்காலமாக சிறுபான்மையினரான இந்துக்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்தத் தனிப்பட்ட தகராறுக்கும் அந்த வன்முறைப் பின்னணிக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


A Hindu businessman named Litton was beaten to death in Kaliganj, Bangladesh, following a dispute over missing bananas. The suspect, Masoom Mia, claimed to have found a stolen bunch of bananas at Litton’s restaurant, leading to a violent altercation. Masoom, along with his father Swapan Mia and mother, allegedly assaulted Litton, resulting in his immediate death. Police have arrested all three family members and are investigating whether this incident has links to the recent wave of targeted violence against Hindus in the country.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *