கொழும்பில் போதைப்பொருள் வேட்டை; இருவர் கைது
கொழும்பின் வெல்லம்பிட்டி மற்றும் மட்டக்குளி பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில், பெருமளவிலான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இருவர் பிடிபட்டுள்ளனர். வெல்லம்பிட்டி, கொட்டுவில பகுதியில் 50 கிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிடிபட்ட நபர் 35 வயதுடைய அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். தற்போது வெல்லம்பிட்டி போலீசார் இது குறித்து மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதேவேளை, மட்டக்குளி சமித்புர […]