Skip to main content

Super Tamils

வீட்டில் இரு பெண்கள் மீது ஆயுதத் தாக்குதல்

அஹங்கம பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்த நபர் ஒருவர், அங்கிருந்த இரண்டு பெண்களைக் கூரிய ஆயுதங்களால் மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இது குறித்துத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அஹங்கம பொலிஸார், இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர். இருப்பினும், வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் கிடைக்காமல் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவர் 80 வயதுடைய முதியவர் எனத் தெரியவந்துள்ளது. மற்றொரு பெண்ணிற்குத் தொடர்ந்து சிகிச்சை […]

Read More

கொஹுவல துப்பாக்கிச் சூடு; மேலும் மூவர் கைது

கடந்த 30ஆம் திகதி இரவு கொஹுவல, போதியத்த பகுதியில் வீடொன்றுக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுமி காயமடைந்த சம்பவத்திற்கு, உதவி மற்றும் ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொஹுவல பகுதியில் 16 வயது சிறுமி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த சம்பவம் தொடர்பில், அதற்கு உடந்தையாக இருந்த மேலும் மூவரை பொலிஸார் தற்போது வலைவீசிப் பிடித்துள்ளனர். கொஹுவல […]

Read More

தமிழர் பகுதியில் லட்சக்கணக்கான ஆபத்தான பொருள் மீட்பு

புத்தளம், கற்பிட்டி, கந்தகுளிய கடற்கரை பகுதியில் போதைமாத்திரைகள் அடங்கிய இரண்டு பொதிகள் இலங்கை கடற்படையினரால் (12) கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த பாரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு பொதிகளுக்குள் இருந்து மொத்தம் 108,480 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. கடற்படையினரின் தீவிர கண்காணிப்பு காரணமாக, கடத்தல்காரர்கள் இந்தப் பொதிகளை நாட்டிற்குள் கொண்டு செல்ல முடியாமல் பயந்துபோய் கடற்கரையிலேயே கைவிட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட இந்த […]

Read More

இலங்கை விடுதியில் வெளிநாட்டு தொழிலதிபரின் மனைவிக்கு நேர்ந்த துயரம்

நீர்கொழும்பு பகுதியில் உள்ள பிரபல விடுதி ஒன்றின் கட்டடத்தில் இருந்து கீழே வீழ்ந்து 26 வயதுடைய சுவீடன் நாட்டுப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்கொழும்பு பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபல ஹோட்டலில் தங்கியிருந்த போதே இந்தச் சோகச் சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பெண் விடுதியின் 9ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணை பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த அந்தப் பெண் திருமணமானவர் என்பதும், அவரது கணவர் ஒரு தொழிலதிபர் […]

Read More

யாழ் நகைக்கடையில் 10 கோடி ரூபா தங்கம் திருட்டு

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 2 கிலோ கிராம் தங்க நகைகளைத் திருடிய 10 கோடி ரூபாய் பெறுமதியான இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதியில் வசித்து வந்த இந்த இளம்பெண், தான் வேலை பார்த்த நகைக்கடையிலேயே கைவரிசையைக் காட்டியுள்ளார். சிறுகச் சிறுக இவர் தங்கத்தை திருடி வந்ததாக தற்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அந்தப் பெண்ணை எதிர்வரும் ஜனவரி மாதம் 27 ஆம் திகதி வரை சிறையில் […]

Read More

வாடகையாளர் வீட்டில் விபச்சாரம் – யாழில் அதிர்ச்சி சம்பவம்

யாழில் வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டினை வாடகைக்கு பெற்று வீட்டினை விபச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர்களை விளக்ககமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோப்பாய் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி பகுதியில் வெளிநாட்டில் வசிக்கும் ஒருவருக்குச் சொந்தமான சொகுசு வீட்டினை […]

Read More

சட்டவிரோத சிகரெட்டுடன் ஒருவர் கைது

சட்டவிரோத முறையில் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட 2,400 சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய போலீஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையின் போது இவர் பிடிபட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 56 வயதுடைய இந்தியப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக விமான நிலையப் போலீஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். __________________________________________________________________________________________ An Indian national […]

Read More

மனைவி கணவரின் பிறப்புறுப்பை அறுத்த சம்பவம்

அசாம் மாநிலத்தில் வேறொரு பெண்ணுடன் தொடர்பிலிருந்த கணவனின் பிறப்புறுப்பை மனைவி துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் நகன் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தம்பதியர், தற்போது கோவை கணபதி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கணவருக்கு வடமாநிலத்தைச் சேர்ந்த வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பது மனைவிக்குத் தெரியவந்துள்ளது. இது குறித்து அவர் தனது கணவரைக் கண்டித்த போதிலும், அவர் அந்தத் தொடர்புகளைக் கைவிடாமல் தொடர்ந்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று, கணவர் […]

Read More

ஹொட்டலில் நடந்த அதிர்ச்சிகர சம்பவம்

சென்னையைச் சேர்ந்த தம்பதியர் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திற்கு சுற்றுலா சென்றிருந்த போது அவர்கள் தங்கியிருந்த ஹொட்டலில் தனியுரிமை மீறப்பட்ட சம்பவம் தொடர்பில் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகிய நிலையில், அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரும் அவரது கணவரும் உதய்ப்பூரில் உள்ள புகழ்பெற்ற ‘The Leela Palace’ ஹோட்டலில் ஒரு நாளைக்கு 55,000 ரூபாய் வாடகையில் அறை எடுத்து தங்கியிருந்தனர். அவர்கள் குளியலறையில் இருந்த சமயத்தில், ஹோட்டல் ஊழியர் […]

Read More