கொழும்பு சொகுசு வீட்டில் சிக்கிய தம்பதி – மோசடி அம்பலம்
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பிரபல குற்றவாளி ‘படோவிட்ட அசங்கவின்’ போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்த தம்பதியினர், சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹிவளை பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றிற்கு அருகில் வைத்து, மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு பொலிஸார் இந்தத் தம்பதியினரை அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் தெஹிவளை, படோவிட்ட (கட்டம் 5) பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. வெளிநாட்டில் தங்கியிருந்து போதைப்பொருள் கடத்தலை இயக்கி வரும் ‘படோவிட்ட அசங்க’ என்பவரின் வலையமைப்பை இலங்கையில் […]