வீட்டில் இரு பெண்கள் மீது ஆயுதத் தாக்குதல்
அஹங்கம பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்த நபர் ஒருவர், அங்கிருந்த இரண்டு பெண்களைக் கூரிய ஆயுதங்களால் மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இது குறித்துத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அஹங்கம பொலிஸார், இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர். இருப்பினும், வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் கிடைக்காமல் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவர் 80 வயதுடைய முதியவர் எனத் தெரியவந்துள்ளது. மற்றொரு பெண்ணிற்குத் தொடர்ந்து சிகிச்சை […]