Skip to main content

Super Tamils

தமிழர் பகுதியில் யுவதியால் பிடிபட்ட ஆசாமி; பெண்கள் மோசடி அம்பலம்

அம்பாறை பகுதியில் இளம்பெண் ஒருவருக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த குற்றச்சாட்டில் 46 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த இவரால் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண், ஒருகட்டத்தில் பொறுமையிழந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். யுவதியின் முறைப்பாட்டைத் தொடர்ந்து துரிதமாகச் செயற்பட்ட பொலிஸார், சந்தேகநபரை நேற்றைய தினம் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், அவர் அந்தப் பகுதியில் உள்ள இன்னும் பல பெண்களுக்கு நீண்டகாலமாக இதுபோன்று […]

Read More

50 கோடி போதைப்பொருள்; பெண் உட்பட 4 பேர் கைது

தென் மாகாணத்தில் பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது. அஹுங்கல்ல மற்றும் அம்பலாங்கொட பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், சுமார் 50 கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் நான்கு பேர் சிக்கியுள்ளனர். இதில் ஒரு பெண்ணும் அடங்குவதாக தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் உறுதிப்படுத்தியுள்ளார். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 14 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 13 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. […]

Read More

பரீட்சை வற்புறுத்தல்; சினிமா பாணியில் மகன் கொடூரம்; பயத்தில் மகள் செயல்

உத்தரப்பிரதேசத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற அழுத்தம் தந்த தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டிய மகன் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நீட் தேர்வுக்குத் தயாராகுமாறு தந்தை கொடுத்த அழுத்தம் ஒரு கொடூரமான கொலையில் முடிந்துள்ளது. தனது தந்தை மன்வேந்தர் சிங்கை அவரது மகன் அக்சத் பிரதாப் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, உடலைத் துண்டு துண்டாக வெட்டி ஒரு டிரம்மில் மறைத்து வைத்துள்ளார். இந்தச் சம்பவம் மகளின் கண் […]

Read More

தப்பிய குற்றவாளி மீண்டும் கைது; பொடி லெசி பயணம் முடிவு

இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க இன்று (27) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மும்பையில் இருந்து வந்த விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிணையில் வெளியேறி இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்த இவரை, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அழைத்து வந்துள்ளனர். ______________________________________________________________________________________________________________________________________________ Major drug trafficker and murderer ‘Podi […]

Read More

10 முறை சுட்டுக்கொல்லப்பட்ட சட்டத்தரணி; பகீர் பின்னணி

கொழும்பின் அக்குரெகொட பகுதியில் 2026 பெப்ரவரி 13ஆம் திகதி சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டாவது துப்பாக்கிதாரி, மேலும் 10 பாரிய குற்றங்களுடன் தொடர்புடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட சட்டத்தரணி தம்பதியின் வழக்கோடு தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரி மொனராகலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் கடற்படை வீரரான இவர் மீது பாலியல் வன்புணர்வு, கொலை, கொள்ளை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பாரிய […]

Read More

டிஜிட்டல் அபாயம்; பெண்களை மிரட்டி காணொளி கோரிய இளைஞன்

இளம் பெண்களின் அந்தரங்கத்தை வேட்டையாடிய ஒரு நபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிடியில் சிக்கியுள்ளார். சுமார் மூன்று ஆண்டுகளாகத் திட்டமிட்டு இந்த மோசடியில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர், நேற்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கணினி குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் போலியான இணைய இணைப்புகளை உருவாக்கி, மிகத் தந்திரமான முறையில் பெண்களின் கைபேசிகளுக்குள் ஊடுருவி வந்துள்ளார். அங்கிருந்த தனிப்பட்ட வீடியோக்களைத் திருடி, பின்னர் வட்ஸ்அப் ஊடாகப் பாதிக்கப்பட்ட பெண்களுக்கே […]

Read More

உடனே அறிவிக்கவும்; பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரல்

களுத்துறை பகுதியில் அண்மையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூரக் கொலை தொடர்பாக களுத்துறை வடக்கு பொலிஸாரும், குற்ற விசாரணைப் பிரிவினரும் இணைந்து தீவிரமான தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர். விசாரணைகளின் ஒரு கட்டமாக, 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவரைப் பற்றிய முக்கியத் தகவல்கள் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன. இந்தச் சூழலில், குறித்த குற்றச் செயலுடன் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள […]

Read More

சங்கிலிப் பறிப்பு; இராணுவச் சிப்பாய் கைது

சுன்னாகம் நகரில் நேற்று காலை வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரிடம் இராணுவத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அராஜகமான முறையில் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து உடனடியாக சுன்னாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய போலீசார், தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன் பலனாக, மைலிட்டி இராணுவ முகாமில் பணியாற்றி வந்த சம்பந்தப்பட்ட சந்தேக நபர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். குறிப்பாக, சுன்னாகம் காவல் நிலையத்தின் புதிய […]

Read More

சுற்றுலா பயணி 6.2 லட்சம் திருட்டு; கேமராவில் சிக்கிய விடுதி உரிமையாளர் மகள்

காலி, உணவட்டுன பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த ரஷ்யச் சுற்றுலாப் பயணியின் பணம் திருடுபோனது குறித்துப் புகார் அளிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, அந்த விடுதி உரிமையாளரின் மகளைப் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் தங்கள் அறையில் ரகசியமாக வைத்திருந்த கேமராவில் பதிவான காட்சிகளே இந்தத் திருட்டைக் காட்டிக்கொடுத்துள்ளன. சந்தேக நபரான அந்த இளம்பெண், சுற்றுலாப் பயணிகள் இல்லாத நேரத்தில் பலமுறை […]

Read More

நடுவீதியில் தம்பதி கொலை; கூலி விவரம் அம்பலம்

தலங்கம இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பாக நவகமுவவைச் சேர்ந்த இரு சகோதரர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் “டுடூ” மற்றும் “மோதர நிபுண” ஆகிய பாதாள உலகக் கும்பல் தலைவர்களுக்காக இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. “சுத்தா ஐயாவின்” ஒரு வேலையை முடிக்க வேண்டும் என வெளிநாட்டிலிருந்து வந்த உத்தரவின் பேரில், இவர்கள் வாடகைக்கு கார் எடுத்து துப்பாக்கியைக் கடத்திச் சென்று கொலையாளிகளுக்கு வழங்கியுள்ளனர். இந்தக் கொலைத் […]

Read More