வாடகையாளர் வீட்டில் விபச்சாரம் – யாழில் அதிர்ச்சி சம்பவம்
யாழில் வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டினை வாடகைக்கு பெற்று வீட்டினை விபச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர்களை விளக்ககமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோப்பாய் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி பகுதியில் வெளிநாட்டில் வசிக்கும் ஒருவருக்குச் சொந்தமான சொகுசு வீட்டினை […]