தமிழர் பகுதியில் மாயமான இளைஞன்: நீண்ட தேடுதலின் பின் பேரிடி
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அங்குள்ள விளையாட்டு மைதானக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து அந்த இளைஞனை அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த அவரது தாயார், புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். […]