Skip to main content

Super Tamils

தமிழர் பகுதியில் மாயமான இளைஞன்: நீண்ட தேடுதலின் பின் பேரிடி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அங்குள்ள விளையாட்டு மைதானக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து அந்த இளைஞனை அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த அவரது தாயார், புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். […]

Read More

யாழ். ராணியால் குடும்பஸ்தர் பலி: உறவுகள் துயரம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயநகர் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் கடவையை கடக்க முற்பட்ட முதியவர் அனுராதபுரம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ். ராணி ரயிலுடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி உதயநகர் பகுதியில் இடம்பெற்ற ஒரு கோர விபத்தில், முதியவர் ஒருவர் ரயிலுடன் மோதுண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாகப் பயணித்துக்கொண்டிருந்த ‘யாழ் ராணி’ ரயிலானது, தண்டவாளத்தை மிதிவண்டியில் கடக்க முயன்ற முதியவர் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. […]

Read More

இன்றைய வானிலை

இன்றைய வானிலை நிலவரப்படி, நாட்டின் வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. மத்திய மலைநாட்டின் கிழக்குச் சரிவுப் பகுதிகள் மற்றும் வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும். இந்த […]

Read More

ஒற்றுமையின் அடையாளமாக சமூக பொங்கல் விழா..! வவுனியா பாரம்பரிய றோட்டறாக்ட் கழகத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நடை பெற்று முடிந்தது..

ஒற்றுமையின் அடையாளமாக சமூக பொங்கல்… இளைஞர்களின் பண்பாட்டுப் பெருவிழா!  2026.01.25 Rotaract Club of Vavuniya Heritage ஏற்பாட்டில், தாண்டிக்குளம் ஐயனார் மைதானத்தில் சமூக பொங்கல் தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு, ஐயனார் விளையாட்டு கழக இளைஞர்களின் ஒத்துழைப்புடன் ஒருமைப்பாடு, பணிவு, கலாசார உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் , பராம்பரிய நிகழ்வுகளை சமூகத்திற்கு கடத்தும் நோக்குடன் மாணவர்களை ஒன்றிணைத்து அவர்களுடன் சேர்ந்து கொண்டாடிய இந்த விழா […]

Read More

அதிவேக நெடுஞ்சாலையில் அதிசொகுசு வாகனம்: விசாரணை தொடர்கிறது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் அபரெக்க மற்றும் பெலியத்த பகுதிகளுக்கு இடைப்பட்ட 140 கிலோமீட்டர் மையில் கல் அருகே சந்தேகத்திற்குரிய வாகனம் ஒன்று நிற்பதாக வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அங்கு சென்ற அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துப் பொலிஸார், அந்த வாகனத்தைக் கைப்பற்றி மேலதிக விசாரணைகளுக்காக திஹகொட பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட வாகனத்தின் இலக்கத் தகட்டைச் சோதித்தபோது, அதே இலக்கத்தைக் கொண்ட மற்றுமொரு வாகனம் இரத்தினபுரியைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. இருப்பினும், […]

Read More

போதைப்பொருள் அடிமை மகன்: தந்தை செய்த அதிர்ச்சி செயல்

பொலனறுவையில் இளைஞர் ஒருவர் அவரின் தந்தையாரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பொலனறுவை, மெதிரிகிரியை பிரதேசத்தில் நேற்று (25) இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு தனது தந்தையால் கொல்லப்பட்டவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட இளைஞர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தனது தந்தையுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு, வீட்டில் தொடர்ந்து பல குழப்பங்களை விளைவித்து வந்துள்ளார். இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், அது […]

Read More

கள்ளக்காதல் விவகாரம்: ஓட்டலில் மனைவி கையும் களவுமாக பிடிப்பு

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியில், திருமணமான மூன்று மாதங்களுக்குள்ளேயே ஒருவர் தனது மனைவியை கள்ளக்காதலனுடன் ஓட்டலில் கையும் களவுமாக பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தம்பதியினர் மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த சில நாட்களாக தனது மனைவியின் நடத்தையில் மாற்றங்கள் தெரிவதை கணவர் கவனித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று, மனைவி தனது அலைபேசியில் பகிர்ந்த ‘லைவ் லொக்கேஷன்’ (Live Location) உதவியுடன், அவர் ஒரு ஹோட்டலில் இருப்பதை […]

Read More

தனிமையில் இருப்பவர்களை கண்காணிக்கும் செயலி: சீனாவின் புதிய முயற்சி

மக்களின் தேவைகளை உணர்ந்து விதவிதமாகவும் விநோதமாகவும் செயலிகள் உருவாக்குவது இணைய உலகில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த அடிப்படையில், தனியாக வசிக்கும் நபர்களின் பாதுகாப்பைக் கண்காணிக்கும் நோக்கில் ‘Are You Dead’ எனும் புதிய செயலி சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் செயலியைப் பயன்படுத்தும் நபர்கள், தாங்கள் நலமுடன் இருப்பதை உறுதி செய்ய இதில் உள்ள ஒரு பிரத்யேக பொத்தானை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அழுத்த வேண்டும். ஒருவேளை பயனர் அந்தப் பொத்தானை அழுத்தத் தவறினால், அவர் […]

Read More

இந்து இளைஞர் உயிருடன் எரித்துக் கொலை: வெளிநாட்டில் அதிர்ச்சி

பங்களாதேஷில் இளைஞர் ஒருவர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது. பங்களாதேஷின் குமிலா மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமிபூர் கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர், நர்சிங்டி பகுதியில் உள்ள ஒரு கடையில் தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு வேலை முடிந்ததும், அவர் வழக்கம்போல அந்தக் கடையிலேயே உறங்கியுள்ளார். நள்ளிரவில் அந்தக்கடை திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கடைக்குள் இருந்து கருகிய நிலையில் அந்த […]

Read More

சாணம் பூசி அரைநிர்வாண ஊர்வலம்: பரபரப்பு சம்பவம்

திருமணமான ஆணுடன் சென்றதாகக் கூறி, 35 வயது விதவைப் பெண் ஒருவரை ஒரு கும்பல் அரை நிர்வாணப்படுத்தி, ஊர் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பென்ட்ரா மாவட்டத்தில் இந்த மனிதாபிமானமற்ற செயல் அரங்கேறியுள்ளது. கணவரை இழந்த பெண் ஒருவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமான நபர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இதன் காரணமாக இருவரும் ஊரை விட்டு வெளியேறி, அண்டை மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் வசித்து […]

Read More