யாழின் பிரபல சுற்றுலாத்தளம்: சமூக சீரழிவின் மையமாக மாறும் அதிர்ச்சி
வேலணை மண்டைதீவு சுற்றுலாத்தளத்தை சமூக சீரழிவின் மையமாக உருவெடுத்து வரும் சமூக விரோத செயற்பாடுகளின் பிடியிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்தியுள்ளார். வேலணை மண்டைதீவு சுற்றுலாத்தளம் குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இப்பகுதியின் வளர்ச்சியை நோக்காகக் கொண்டும், சுற்றுலாவை மேம்படுத்தவும் கடந்த 2016 ஆம் ஆண்டு சுமார் 77 மில்லியன் ரூபாய் செலவில் சுற்றுலா அமைச்சினால் இந்த மையம் உருவாக்கப்பட்டது. இருப்பினும், முறையான மேலாண்மை […]