Skip to main content

Super Tamils

யாழ்ப்பாணம்; மதமாற்ற குற்றச்சாட்டு; விசாரணை கோரிக்கை

யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மீது மதம் மாற்றம் மற்றும் பண மோசடி தொடர்பான புகார்கள் கிளம்பியுள்ளன. பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர்களின் உறவினர்கள், அந்தப் பெண்ணின் செயல்பாடுகள் குறித்து பெரும் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, 64 வயதுடைய நபர் ஒருவருக்குப் பணமும் பொருள்களும் ஆசை காட்டப்பட்டு, அவர் மதமாற்றம் செய்யப்படவிருந்ததாக அவருடைய குடும்பத்தினர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக உரிய தரப்பினர் முறையான விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். […]

Read More

கடவுச்சீட்டு பெற நேரில் வர தேவையில்லை

பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய அலுவலகங்களுக்கு இன்று (13) சேவை பெறுவதற்காக பொதுமக்கள் வருகைத் தருவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் நேற்று இந்த அவசரமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் திடீரென ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு இன்னும் சரிசெய்யப்படாத காரணத்தால், மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதைத் தவிர்க்க இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் வழக்கமான சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (16) முதல் […]

Read More

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை

வானிலை அறிக்கையின்படி, ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும். வடக்கு மாகாணத்திலும் அநுராதபுரம், ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளில் மதியத்திற்கு பிறகு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சப்ரகமுவ மாகாணம் மற்றும் களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம். மேலும், மேற்கு மற்றும் சப்ரகமுவ […]

Read More

துப்பாக்கி முனையில் தாலி; வைரலாகும் காணொளி

இந்தியாவில் பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில், காவல்துறைத் தேர்விற்குத் தயாராகிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு, போதைப்பொருள் கொடுக்கப்பட்ட நிலையில் வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து வைக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பீகாரில் துப்பாக்கி முனையில் மணமகனைக் கடத்தித் திருமணம் செய்து வைக்கும் ‘பகடவா விவா’ எனும் கலாசாரம் நிதிஷ் குமார் என்ற இளைஞருக்கு நேர்ந்துள்ளது. நூலகத்திற்குச் சென்ற இவரை ஒரு கும்பல் கடத்திச் சென்று, போதைப்பொருள் கொடுத்து மயக்கமடையச் செய்து, ஒரு கோவிலில் வைத்து வலுக்கட்டாயமாகத் திருமணம் […]

Read More

செயற்கை நுண்ணறிவு; மனித குலத்துக்கு அச்சுறுத்தலா?

செயற்கை நுண்ணறிவு மனிதக் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் அபாயம் இருப்பதாகக் கூறி, OpenAI நிறுவனத்தின் முக்கிய பொறியியலாளர் ஒருவர் பதவி விலகியது தொழில்நுட்ப உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு நடைமுறைகளில் திருப்தியின்மை மற்றும் லாபத்திற்காக பாதுகாப்பை நிறுவனங்கள் புறக்கணிப்பதே இவரது வெளியேற்றத்திற்கு முக்கிய காரணமாகும். ஏற்கனவே ‘அந்த்ரோபிக்’ நிறுவனத்தின் பாதுகாப்புத் தலைவரும் இதே காரணத்திற்காக வெளியேறிய நிலையில், இப்போது OpenAI பொறியியலாளரும் அதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். போதிய கட்டுப்பாடுகள் இன்றி AI தொழில்நுட்பம் வளர்வது எதிர்காலத்தில் பாரிய […]

Read More

இணைய வணிகம் பெயரில் ரூ.60 இலட்சம் மோசடி; CID விசாரணை

பெண்ணொருவரிடம் 60 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பணத்தை மோசடி செய்த இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதாகக் கூறி, ஒரு பெண்ணிடமிருந்து 61 இலட்சத்து 5,600 ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் கொழும்பு மற்றும் குளியாப்பிட்டியவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சந்தேகநபர்களில் ஒருவரது வங்கிக் கணக்கிற்கு அந்தப் பணம் அனுப்பப்பட்டுள்ளது. பின்னர், அந்தப் […]

Read More

மாயமான தொலைபேசிகள்; மக்களுக்கு கடும் எச்சரிக்கை

கடந்த 2025 ஆம் ஆண்டு மாத்திரம் நாடளாவிய ரீதியில் சுமார் 2,355 கையடக்கத் தொலைபேசிகள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொலைந்து போகும் அல்லது திருடப்படும் தொலைபேசிகள் நிதி மோசடி மற்றும் சட்டவிரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் எச்சரித்துள்ளார். உங்கள் தொலைபேசி காணாமல் போனால் உடனடியாக சிம் அட்டையை முடக்கிவிட்டு, IMEI இலக்கத்துடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதுடன் www.ineed.police.lk இணையதளத்திலும் பதிவு செய்வது அவசியமாகும். கடந்த 2025ல் 2,355 […]

Read More

உலக பரா தடகளம்; தங்கம் வென்ற ஜனனி தனஞ்சனா

துபாயில் நடைபெற்று வரும் 2026 உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் தொடரில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஜனனி தனஞ்சனா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பெண்களுக்கான 100 மீற்றர் (T46/47 பிரிவு) ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட ஜனனி, மின்னல் வேகத்தில் இலக்கை அடைந்து முதலிடத்தைப் பிடித்தார். சர்வதேச அரங்கில் அவர் வென்றுள்ள இந்தத் தங்கம், இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளது. அதேபோல், ஆண்களுக்கான நீளம் பாய்தல் (T46/47 பிரிவு) போட்டியில் இலங்கையின் புத்திக ஹேஷான் வெள்ளிப் பதக்கம் வென்று […]

Read More

பிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞன் பாலியல் குற்றத்தில் கைது

பிரித்தானியாவில் யுவதியை பாலியல் சீண்டல் செய்த இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சவுதாம்டன் பகுதியில் 19 வயது இளம்பெண் ஒருவருக்கு போதைப்பொருள் கொடுத்து, அவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக 21 வயதான வியான் சுரேந்திரநாதன் என்ற இலங்கை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த பெப்ரவரி 5ஆம் திகதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அவருக்கு மயக்க மருந்து கொடுத்தமை மற்றும் ‘Class A’ ரக போதைப்பொருட்களை வைத்திருந்தமை உள்ளிட்ட […]

Read More

இளைஞன் மீது தாக்குதல்;நடிகை மகன் உள்ளிட்ட குழுவுக்கு நீதிமன்ற அதிரடி உத்தரவு

கொழும்பின் புறநகர்ப் பகுதியான இராஜகிரியவில், இளைஞன் ஒருவரை மண்வெட்டியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராஜகிரியவில் இளைஞன் ஒருவர் மண்வெட்டியால் கொடூரமாகத் தாக்கப்படும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தினர். இந்தக் காணொளிகளை ஆதாரமாகக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட 7 பேரை பொலிஸார் தற்போது கைது செய்துள்ளனர். கடந்த 9ஆம் திகதி இது குறித்து வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், இந்தச் சம்பவம் சுமார் […]

Read More