Skip to main content

Super Tamils

அரசின் எரிபொருள் விலை குறைப்புக்கு எதிர்ப்பு…! ‘இது போதுமானதல்ல’ என மக்கள் கருத்து.

எரிபொருள் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டமை தொடர்பில் பொதுமக்கள் தமது கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் குறிப்பிட்ட சில எரிபொருட்களின் விலைகளைக் குறைத்து புதிய விலைத்திருத்தத்தை அறிவித்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 20 ரூபாயால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 414 ரூபாயாகவும், லங்கா ஆட்டோ டீசலின் விலை 25 ரூபாயால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 382 ரூபாயாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. […]

Read More

PTA வழக்கில் பிள்ளையான் மீண்டும் விளக்கமறியல்…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையானை எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டுள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றைய தினம் (30.06.2026) இந்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான், இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த 14 நாட்களுக்கு […]

Read More

40 ஆண்டு பழமையான பாலம் இடிந்தது…! தற்காலிக தீர்வை அறிவித்த அரசு.

மட்டக்களப்பில் உடைந்து வீழ்ந்துள்ள புதிய பாலத்துக்கு பதிலாக பெய்லி ரக பாலத்தை தற்காலிமாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். இதன்படி, இந்த தற்காலிக பாலத்தை நிர்மாணிக்கும் பணிகள் வரும் வியாழக்கிழமை முதல் முறைப்படி தொடங்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பாலத்தை விரைவாக அமைப்பது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் மிகவும் துரிதமாகப் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார். ஏறத்தாழ 40 ஆண்டுகள் பழமையான இந்த மட்டக்களப்பு புதுப்பாலத்தில் வெடிப்புகள் ஏற்பட்டிருந்த […]

Read More

டெங்கு பரவல் தீவிரம்…! 53 ஆயிரத்தை கடந்த நோயாளர்கள் – 31 உயிரிழப்புகள்.

நாடளாவிய ரீதியில் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 85,712 இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இவற்றில் சுமார் 7,188 இடங்களில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய சாதகமான சூழல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், டெங்கு கொசுக்கள் பெருகும் வகையில் தங்களது சுற்றுப்புறத்தை அசுத்தமாக வைத்திருந்த ஆறாயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து, வழக்கு தொடர ஏற்பாடுகள் […]

Read More

மத்திய கிழக்கு பதற்றம் தணியுமா…? உலக சந்தையில் எண்ணெய், எரிவாயு விலை திடீர் சரிவு.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று (30) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் போர்ச் சூழல் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையிலும், சர்வதேச எரிசக்தி சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகள் இன்றைய தினம் சரிவைச் சந்தித்துள்ளன. உலகளாவிய சந்தை விபரங்களின்படி, டபிள்யூ.டி.ஐ (WTI) ரக கச்சா எண்ணெய் ஒரு பேரல் 70.71 அமெரிக்க […]

Read More

வெனிசுவேலா நிலநடுக்கம்…! அர்ஜென்டினா கால்பந்து வீரரின் மனைவி, குழந்தைகள் உயிரிழப்பு.

இரட்டை நிலநடுக்கத்தில் வெனிசுவேலாவின் கால்பந்து கிளப்பில் விளையாடும் அர்ஜென்டினா வீரர் லூகாஸ் ட்ரெஜோவின் குடும்பத்தினர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் துயரமான செய்தியை லூகாஸ் ட்ரெஜோவின் நண்பரும் சக கால்பந்து வீரருமான எட்சன் டோர்டோலெரோ தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார். கடந்த புதன்கிழமை அன்று வெனிசுவேலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகளும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. நிலநடுக்கப் பேரிடரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1,719 ஆக […]

Read More

சட்டவிரோத மதுபான சோதனையில் பரபரப்பு…!பொலிஸார் மீது 8 கொடூர நாய்கள் ஏவி தாக்குதல்.

களுத்துறை அருகே உள்ள கல்பாத்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்று வந்த ஒரு இடத்தை சோதனையிடச் சென்ற போலீசாருக்கு அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்கு சோதனையிடச் சென்ற போலீஸ் அதிகாரிகள் மீது, அங்கிருந்த பெண் ஒருவர் திடீரென எட்டு கொடூரமான நாய்களை ஏவி விட்டுள்ளார். இந்த எதிர்பாராத நாய் தாக்குதலில் அங்குருவாதொட்ட போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நான்கு போலீசார் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக களுத்துறை நாகொட பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். சுமார் […]

Read More

ஹோர்முஸ் கடற்பாதையில் பாதுகாப்பு கேள்விக்குறி…! IMO அவசர ஆலோசனை.

ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) மேற்கொண்ட திட்டத்தில் தற்போது முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. தைவானைச் சேர்ந்த ‘நுஎநச டுழஎநடல’ என்ற சரக்குக் கப்பல் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது அதன் மீது திடீரெனத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக, நேற்று முதல் இந்த மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல் சம்பவமானது, அந்தப் பகுதியில் பயணிக்கும் சர்வதேச கப்பல்களின் பாதுகாப்புக்கு யார் […]

Read More

அதிகாலையில் கோர விபத்து…! 20 அடி பள்ளத்தில் பாய்ந்த அரசுப் பேருந்து.

பதுளை நோக்கி கொழும்பில் இருந்து பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பில் இருந்து புறப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் ஒன்று அதிகாலை வேளையில் எதிர்பாராதவிதமாக சுமார் 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் தலைகீழாகப் பாய்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இந்த கோர விபத்தில் பஸ்ஸில் பயணித்த 40 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். தியத்தலாவ ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியில் வைத்தே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த உடனே […]

Read More

USGS ‘Red Alert’…! வெனிசுலாவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு

வெனிசுலாவில் இடம்பெற்ற பாரிய நிலநடுக்கங்களின் தாக்கத்தால் இறப்பு எண்ணிக்கை 100,000-ஐத் தாண்டக்கூடும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மதிப்பிட்டுள்ளது. முதலில், யாராகுய் மாகாணத்தின் சான் பெலிப் நகருக்குப் பக்கத்தில் 20 முதல் 22 கிலோமீட்டர் ஆழத்தில் 7.2 ரிக்டர் அளவில் ஒரு முன் அதிர்வு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வெறும் 39-40 வினாடிகளிலேயே, அதே மாகாணத்தின் யூமாரே பகுதியை மையமாக வைத்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் 7.5 ரிக்டர் அளவில் முதன்மையான பெரிய நிலநடுக்கம் உருவானது. […]

Read More