முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையானை எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டுள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்றைய தினம் (30.06.2026) இந்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான், இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கடந்த 14 நாட்களுக்கு முன்னதாக அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 6 பிரதான குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையிலேயே, அவர் இன்றைய தினம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The Batticaloa Magistrate’s Court has ordered the remand of former State Minister Sivanesathurai Chandrakanthan, alias Pillayan, until July 13, 2026. Pillayan, who was detained under the Prevention of Terrorism Act (PTA), was produced before the court today regarding a case involving six charges brought against him two weeks ago.