பல யுவதிகள் துஷ்பிரயோகம்: தொழிலதிபர் மீது குற்றச்சாட்டு
18 வயதுக்குட்பட்ட பல பதின்ம வயது பெண் பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. கண்டி, பேராதனை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய தொழிலதிபர் ஒருவர், சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட அதிரடி விசாரணையில் இந்த […]