Skip to main content

Super Tamils

பல யுவதிகள் துஷ்பிரயோகம்: தொழிலதிபர் மீது குற்றச்சாட்டு

18 வயதுக்குட்பட்ட பல பதின்ம வயது பெண் பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. கண்டி, பேராதனை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய தொழிலதிபர் ஒருவர், சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட அதிரடி விசாரணையில் இந்த […]

Read More

100+ சிறுமிகள் பாதிப்பு: கனடா வாழ் தமிழருக்கு ஆயுள்

கனடாவின் டொராண்டோவைச் சேர்ந்த 40 வயது ரமணன் பத்மநாதன், அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகளை இணையதளம் வழியாகப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி பல ஆண்டுகளாக இந்தச் சுரண்டலில் அவர் ஈடுபட்டு வந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆஜரான ரமணன், சிறுமிகளை வற்புறுத்தி ஆபாசப் படங்களைத் தயாரித்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார். சுமார் ஏழு ஆண்டுகளாகத் திட்டமிட்டு நடத்தப்பட்டு வந்த இந்தச் சதித் திட்டம், அவர் […]

Read More

படிக்க வந்த இடத்தில் கொடூரம்: 22 வயது பெண் வன்கொடுமை

சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்தக் கல்லூரியின் கேன்டீனில் பணியாற்றி வந்த ஊழியர் மற்றும் உணவக உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேரை சைதாப்பேட்டை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், கேன்டீனில் வேலை செய்து வந்த குணசேகர் என்பவர் அந்தப் பெண்ணை முதலில் துன்புறுத்தியதாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து அவருடன் பணியாற்றிய கார்த்திகேயன் மற்றும் […]

Read More

நாட்டின் பல பகுதிகளில் ஓரளவு பலத்த மழை

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மதியத்திற்குப் பிறகு ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக ஒரு சில பகுதிகளில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் மக்கள் அவதானமாக இருப்பது அவசியம். அதேபோல், அதிகாலை நேரங்களில் சப்ரகமுவ, மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, பதுளை போன்ற மாவட்டங்களில் பனிமூட்டம் அதிகமாகக் காணப்படும் […]

Read More

தங்கம் விலை தொடர் சரிவு: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சுமார் 200 அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடைந்துள்ளமை நகைப் பிரியர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,889 அமெரிக்க டொலராக இருந்த நிலையில், இன்றைய தினம் (2) அது 4,687 டொலராகக் குறைந்துள்ளது. உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள இந்த விலை மாற்றத்திற்கு ஏற்ப, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய காலை நிலவரப்படி, ஒரு பவுன் […]

Read More

யாழில் மருத்துவ தவறு: சிறுமியின் கை துண்டிப்பு – நீதிவான் கடும் அதிருப்தி

யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ தவறால் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தொடர்பில் பொலிசாரின் விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றம் கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டதில் ஏற்பட்ட பாதிப்பால் அவரது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டது. இது மருத்துவத் தவறு எனக்கூறி பெற்றோர் தொடர்ந்த வழக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் பொலிஸார் […]

Read More

Vacancy

வேலைவாய்ப்பு! #vacancy வேலை இடம் வவுனியா (வவுனியா நகரிலிருந்து 3km சுற்றுவட்டாரத்திற்குள் இருப்பவர் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.) Positions Available: ⏳ Student Coordinator ⏳ Office Administrator ⏳ Social Media Manager உங்களுடைய CV / Biodata வினை அனுப்ப வேண்டிய வாட்ஸ் அப் இலக்கம். 077 223 8826 மேலதிக தகவல்களுக்கு 077 223 8826 அழைக்குவும்.. #vacancy #Vavuniya #vavuniyajobs #Vavuniya

Read More

போதைப்பொருள் சோதனை: பொலிஸாரை தாக்கியவர்கள் கைது

போதைப்பொருள் சோதனையில் ஈடுபடச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கிய குற்றச்சாட்டில் நான்கு பேர் மஹா ஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மஹா ஓயா பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று கடந்த 31ஆம் திகதி இரவு ‘கல்வலயாய 1000 ஏக்கர்’ பகுதியில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் திடீரென பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சிகிச்சைக்காக மஹா ஓயா […]

Read More

சுற்றுலா பகுதியில் திருட்டு: வெளிநாட்டு பெண்ணிடம் கைபேசி பறிப்பு

ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்த சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியைத் திருடிய நபர் ஒருவரை, உனவட்டுன சுற்றுலாப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தனது கைபேசி திருடப்பட்டதாக அந்த வெளிநாட்டுப் பெண் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, உனவட்டுன சுற்றுலாப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர். அந்த விசாரணைகளின் பலனாக சந்தேகநபர் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து அப்பெண்ணுக்குச் சொந்தமான பெறுமதிமிக்க கையடக்கத் தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளது. பிடிபட்ட நபர் மீது […]

Read More

வீட்டிற்குள் கூரிய ஆயுதத் தாக்குதல்: பெண் படுகொலை

மொனராகல, பிபிலை – ரதலியத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் சந்திரிகா ஷியாமலி என்ற 40 வயதுடைய பெண் அவரது வீட்டின் வரவேற்பறையில் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவருக்கு அருகிலேயே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சந்தேக நபரான துமிந்த என்பவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்ததை பொலிஸார் கண்டறிந்தனர். உயிரிழந்த பெண் கொழும்பில் அழகு நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் என்பதும், அண்மையில் தொழில் நிமித்தம் […]

Read More