Skip to main content

Super Tamils

போதைப்பொருள் சோதனை: பொலிஸாரை தாக்கியவர்கள் கைது

போதைப்பொருள் சோதனையில் ஈடுபடச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கிய குற்றச்சாட்டில் நான்கு பேர் மஹா ஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

மஹா ஓயா பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று கடந்த 31ஆம் திகதி இரவு ‘கல்வலயாய 1000 ஏக்கர்’ பகுதியில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் திடீரென பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சிகிச்சைக்காக மஹா ஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட தடியொன்றையும், தாக்குதல் நடத்திய நான்கு சந்தேகநபர்களையும் பொலிஸார் தற்போது கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தெஹியத்தக்கண்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

______________________________________________________________________________________________

Four individuals were arrested by Maha Oya police for attacking a team of officers during a drug raid in the ‘Kalwalayaya 1000 Acre’ area. A police sergeant was hospitalized following the assault, and the suspects, along with the wooden pole used in the attack, are set to be produced before the Dehiattakandiya Magistrate’s Court.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *