Skip to main content

Super Tamils

7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துஸ்பிரயோகம்; 5 ஆசிரியர்கள்

கல்வி புகட்ட வேண்டிய ஆசிரியர்களே வேலியே பயிரை மேய்ந்த கதையாக மாறியுள்ள அதிர்ச்சி சம்பவம் ஒடிசாவில் அரங்கேறியுள்ளது. ஒரு ஆசிரியர் தொடங்கிய இந்த அராஜகம், பின்னர் மற்ற நான்கு ஆசிரியர்களுக்கும் தெரியவந்த நிலையில், அவர்களும் அந்தச் சிறுமியைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். நீண்ட நாட்களாகத் தொடர்ந்த இந்தத் துயரத்தை அந்தச் சிறுமி அண்மையில் தனது பெற்றோரிடம் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். இதனைத் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, மாவட்ட குழந்தைகள் நலக் குழுவின் உதவியை நாடினார். அக்குழுவினர் […]

Read More

பிரபல பெண்கள் பாடசாலையில் பாலியல் சீண்டல்; மர்ம நபர் யார்?

கண்டியில் உள்ள ஒரு முக்கிய மகளிர் பாடசாலையில் 9 வயது சிறுமி ஒருவர் மர்ம நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் உடனடியாகக் கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். தற்போது அந்த மாணவி மேலதிக பரிசோதனைகளுக்காகப் பேராதனை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், பாடசாலையின் சிசிடிவி காட்சிகளின்படி வெளிநபர் ஒருவர் […]

Read More

லண்டனில் இருந்து வந்த நபர்; யாழில் விதவை பெண்ணுக்கு துரோகம்

லண்டனில் வசிக்கும் யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த 47 வயதுடைய தம்பையா ஜெயக்குமார் என்பவர், அரசுத் துறையில் பணியாற்றும் 36 வயதுடைய விதவை பெண் ஒருவரை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2018-ல் கணவரை இழந்த அந்தப் பெண்ணுக்கு, சமூக வலைத்தளம் மூலம் ஜெயக்குமார் அறிமுகமாகியுள்ளார். ஆரம்பத்தில் ஆறுதல் கூறுவது போலப் பேசி நம்பிக்கையை ஏற்படுத்தியவர், பின்னர் தனது மனைவியைப் பிரிந்து வாழ்வதாகக் கூறி நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்டுள்ளார். பலமுறை இலங்கைக்கு வந்து அந்தப் […]

Read More

கல்கிசையில் பாரிய சுற்றிவளைப்பு – பெண் அளித்த தகவல்

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபர் (பெண்) ஒருவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஐஸ் போதைப்பொருள், துப்பாக்கி மற்றும் போலி இலக்கத் தகடுகள் உள்ளிட்ட பல பொருட்களைக் கல்கிஸ்ஸ பொலிஸ் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இரத்மலானையில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பெண் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கல்கிஸ்ஸவில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சிக்கின. அங்கு 10 கிராம் ஐஸ், 8 இலட்சம் ரூபா பணம் மற்றும் ஒரு துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது. […]

Read More

போதைப்பொருள் சோதனை: பொலிஸாரை தாக்கியவர்கள் கைது

போதைப்பொருள் சோதனையில் ஈடுபடச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கிய குற்றச்சாட்டில் நான்கு பேர் மஹா ஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மஹா ஓயா பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று கடந்த 31ஆம் திகதி இரவு ‘கல்வலயாய 1000 ஏக்கர்’ பகுதியில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் திடீரென பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சிகிச்சைக்காக மஹா ஓயா […]

Read More

கள்ளக்காதலன் தாக்குதல்: 24 வயது யுவதி பலி

நேற்று (27) பகல் வேளையில் அங்குலான பகுதியில் அமைந்துள்ள சயுரபுர தொடர்மாடித் குடியிருப்புத் தொகுதியில் இந்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. வாத்துவ, குடாவஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான இளம் பெண் ஒருவரே இந்தத் தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணுக்கும், அந்த நபருக்கும் இடையே நீண்ட காலமாகத் தொடர்பு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு எல்லை மீறிப் போனதில், ஆத்திரமடைந்த அந்த நபர் பெண்ணைத் தாக்கியுள்ளார். இந்தக் கொடூரமான தாக்குதலே பெண்ணின் […]

Read More

துப்பாக்கி முனையில் தம்பதியரை மிரட்டி கொள்ளை: பரபரப்பு

இரண்டு மாடி வீட்டிற்குள் கருப்பு நிற உடையணிந்து, கருப்பு நிற துணியால் முகத்தை மூடிய ஐந்து பேர் கொண்ட கும்பல், துப்பாக்கி முனையில் தம்பதியினரை மிரட்டி, கிட்டத்தட்ட ரூ.4 மில்லியன் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து, பின்னர் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். அதுருகிரிய, போரலுகொட வீதியில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடு ஒன்றில் நள்ளிரவில் பயங்கர கொள்ளைச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கருப்பு நிற உடையணிந்து, முகத்தை மூடியபடி வீட்டிற்குள் புகுந்த ஐந்து பேர் கொண்ட […]

Read More

தமிழர் பகுதியில் மாயமான இளைஞன்: நீண்ட தேடுதலின் பின் பேரிடி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அங்குள்ள விளையாட்டு மைதானக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து அந்த இளைஞனை அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த அவரது தாயார், புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். […]

Read More

1.5 கிலோ ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்: இருவர் கைது

1 கிலோ 501 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களை மாதம்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (22) அதிகாலை மாதம்பிட்டிய பகுதியில் உள்ள ‘சத்ஹிரு செவன’ அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் முச்சக்கரவண்டி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதனைச் சோதனையிட்ட பொலிஸார், அங்கிருந்த இருவரிடமிருந்து பெருமளவிலான ஐஸ் போதைப்பொருளைக் கைப்பற்றியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வெள்ளம்பிட்டிய மற்றும் கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த 24 மற்றும் 29 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். […]

Read More

900 மில்லியன் போதைப்பொருள் பறிமுதல்: ஒருவர் கைது

நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நிட்டம்புவ பகுதியில் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது. கோணஹேன விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நிட்டம்புவ – பின்னகொல்லவத்தை பகுதியில் உள்ள அரலிய ஒழுங்கையில் அதிரடிச் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது முச்சக்கர வண்டி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட சுமார் 61 கிலோ 838 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் […]

Read More
  • 1
  • 2