சொகுசு காரில் இளைஞர்கள் செய்த செயல்: 5 பேர் கைது
முல்லைத்தீவு குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, கோம்பாவில் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையில் இந்த ஐந்து சந்தேகநபர்களும் பிடிபட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு பொலிஸார் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மன்னார், வலைஞர்மடம், திம்பிலி மற்றும் கைவேலி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் 20 முதல் 28 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெகனார் ரக கார் ஒன்றில் வைத்து போதைப்பொருளை விற்பனை செய்துகொண்டிருந்த போதே இவர்கள் பொலிஸாரிடம் வசமாகச் சிக்கியுள்ளனர். இதன்போது […]