மின்சார வேலியில் சிக்கி சிறுவன் பலி: தமிழர் பகுதியில் சோகம்
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புளியங்குளம் அலகரை கிராமத்தில் இன்று ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு வசித்து வந்த 5 வயது சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். நடந்தது என்னவென்றால், அந்தச் சிறுவன் தனது அம்மம்மாவுடன் புல் வெட்டுவதற்காகச் சென்றிருக்கிறான். அப்போது அந்தப் பகுதியில் யானைகளின் நடமாட்டத்தைத் தடுப்பதற்காகச் சட்டவிரோதமான முறையில் மின்சார வேலி அமைக்கப்பட்டிருந்தது. எதிர்பாராத விதமாக அந்த மின்சார வேலியில் சிறுவனின் கழுத்துச் சிக்கியுள்ளது. இதனால் […]