அதிர்ச்சி சம்பவம்…!குடும்பத் தகராறில் மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவன்.
மொனராகலை, கொடிகமுவ முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை வேளையில் இவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டுள்ளது. கடுமையான தீக்காயங்களுடன் பியகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். பிபில, கொடிகமுவ முஸ்லிம் பகுதியைச் சேர்ந்த ரினோஷா உம்மா என்ற 4 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்தவராவார். உயிரைப் பறித்த தீ வழக்கம் போல அன்றைய தினமும் […]