Skip to main content

Super Tamils

இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா…? மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி.

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்திருந்தாலும், தற்போதைக்கு நம் நாட்டில் எரிபொருள் விலை குறைய வாய்ப்பில்லை என்று இலங்கை கனிமவள கூட்டுத்தாபனம் தெளிவுபடுத்தியுள்ளது. இதுபற்றி அந்த கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர் மயூர நெத்திகுமார கருத்து தெரிவிக்கையில், உலக சந்தையில் நிலவும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது, அமெரிக்கா – ஈரான் மோதலுக்கு முன்பு இருந்த குறைந்த விலைக்கு இன்னும் வரவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்க மற்றும் ஈரான் அதிபர்களுக்கு இடையே யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் […]

Read More

இலங்கை – தமிழக கடல்வழியில் பதற்றம்… ஊடுருவல் அபாயத்தால் பாதுகாப்பு தீவிரம்!

தமிழகத்தின் தனுஷ்கோடி பகுதியில் காவல்துறை சோதனைச் சாவடிகள் கைவிடப்பட்டுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான சட்டவிரோத ஊடுருவல்கள் மற்றும் கடத்தல்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இலங்கைக்கும் இந்த பகுதிக்கும் இடையில் மிகக் குறுகிய கடல் எல்லையே காணப்படுவதால், இந்த பாதுகாப்பு குறைபாடு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னார் வரையான தூரம் வெறும் 38 கிலோமீற்றர் மட்டுமே. இதில் தனுஷ்கோடியில் இருந்து 11 […]

Read More

உடல்களை மறைக்க உதவியவர் சிக்கினார்…! இலங்கையில் அதிரவைத்த கொலை வழக்கு!

சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர், 2020 கொவிட் தொற்று காலப்பகுதியில் கிராண்பாஸ் பகுதியில் தம்பதியினரை படுகொலை செய்து, உடல் பாகங்களை கால்வாய் ஒன்றில் புதைத்த சம்பவத்தில் குற்றச்செயலுக்கு உதவி ஒத்தாசை புரிந்த சந்தேகநபர் ஒருவர் போதைப்பொருளுடன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டில் கிராண்ட்பாஸ், கம்பிகொட்டுவத்த பகுதியில் வசித்துவந்த சுனில் குமாரசிங்க மற்றும் அவரது மனைவியான குமுது டி சில்வா ஆகிய இருவரையும் திடீரென காணவில்லை. இது தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் […]

Read More

தோண்டும் போதெல்லாம் அதிர்ச்சி..! யாழில் தொடர்ந்து கிடைக்கும் மண்டையோட்டுகள்.

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது, சிறுவர்களினது எனப் பலத்த சந்தேகிக்கப்படும் 4 எலும்புத் தொகுதிகள் உட்பட புதிதாக மேலும் 5 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. செம்மணி பகுதியில் உள்ள மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், 15ஆவது நாள் அகழ்வு நடவடிக்கைகள் நேற்று புதன்கிழமை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, தடயவியல் நிபுணர்களின் நேரடி மேற்பார்வையில் […]

Read More

புத்தளம் வான்பரப்பில் மர்மப் பொருள்: அச்சத்தில் வீதிகளில் திரண்ட பொதுமக்கள்!

புத்தளத்தில் இன்று அதிகாலை வேளையில் வானில் திடீரென ஒரு பிரகாசமான பொருள் தென்பட்டது. இதனால் அந்தப் பகுதி மக்களிடையே ஒரே பரபரப்பும் ஆச்சரியமும் தொற்றிக் கொண்டது. வானில் தெரிந்த இந்த விசித்திரமான காட்சியைக் காண்பதற்காகவே, மக்கள் பலரும் நள்ளிரவு என்றும் பாராமல் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளுக்கு வந்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அங்கே திரண்டிருந்த மக்கள் பலர், வினோதமாகத் தெரிந்த அந்தப் பொருளைத் தங்கள் மொபைல் போன்களில் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் […]

Read More

மட்டக்களப்பில் தீவிரமடையும் தொற்றாநோய்…! தடுப்பு நடவடிக்கைகள்.

மட்டக்களப்பு பகுதியில் புகையிலை மற்றும் போதைப்பொருள் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை நாம் இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட தொற்றா நோய் தடுப்பு பிரிவுக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி எம்.ருதேசன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச புகைத்தல் ஒழிப்பு வாரத்தின் இரண்டாம் நாளான இன்று (01.06.2026), மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களமும் மாவட்ட செயலகமும் இணைந்து ஒரு விழிப்புணர்வு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. […]

Read More

முக்கிய அறிவிப்பு…!அரச நிறுவனங்களில் புதிய கட்டுப்பாடு அமுல்.

அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்வதற்கும், பயன்படுத்துவதுவதற்கும் இன்றுடன் (31) தடைவிதிக்கப்பட்டுள்ளது. அரசாங்க அலுவலகங்களில் சேரும் கழிவுகளை முறையாகக் கையாளுவதை உறுதி செய்யும் நோக்கில், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் கடந்த 15ஆம் திகதி விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்த புதிய உத்தரவானது அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரச சபைகளின் தலைவர்கள் ஆகியோருக்கு […]

Read More

புதிய போக்குவரத்து அபராத முறை…!அலட்சியம் காட்டும் பொலிஸாருக்கு எச்சரிக்கை.

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை சம்பவ இடத்திலேயே GovPay செயலி மூலம் செலுத்துவதற்கு வாகன ஓட்டிகளுக்கு வசதி செய்து கொடுக்காத போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புக்கான பிரதிப்பொலிஸ் மா அதிபர் டப்ளியூ பீ.ஜே. சேனாதீர எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் பகிர்ந்து கொண்ட விபரங்கள் இதோ: இதற்கு முன்பு, வாகன ஓட்டிகள் தங்களின் போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்காக நீண்ட நேரம் அலைந்து திரிந்து, […]

Read More

விசேட விடுமுறை தொடர்பாக அரசு வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்கள்…!

அரசாங்க வெசாக் தினத்தை முன்னிட்டு வரும் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையை அரசு விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ வர்த்தமானி அறிவிப்பை பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன வெளியிட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 30ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவின்படி, மே 27ஆம் திகதி முதல் ஜூன் 02ஆம் திகதி வரையிலான வாரத்தை வெசாக் வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, இன்று (மே 27) தொடக்கம் ஜூன் மாதம் 2ஆம் […]

Read More

அதிர்ச்சியில் இலங்கை…! மூளைக்காய்ச்சலால் அதிகரிக்கும் பாதிப்புகள்.

அம்பாந்தோட்டை பகுதியில் உள்ள அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில், ‘மெனிஞ்சைடிஸ்’ என்று அழைக்கப்படும் மூளைக்காய்ச்சல் நோய் பரவி வருவதாக ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் தற்சமயம் 1500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள கைதி ஒருவர் இந்த நோய் பாதிப்பால் உயிரிழந்திருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், சுகாதாரத் துறையினர் இது குறித்து மிக விரிவான விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். சிறைச்சாலை மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 17 கைதிகளிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில், இருவருக்கு இந்த மூளைக்காய்ச்சல் பாதிப்பு […]

Read More
  • 1
  • 2