Skip to main content

Super Tamils

ஜெலென்ஸ்கி எச்சரித்த சில மணி நேரங்களில்…!கீவ் மீது ரஷ்யாவின் பயங்கர ஏவுகணை மழை.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ரஷ்யா இரவோடு இரவாக மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டு வருவதாக எச்சரித்த சில மணி நேரங்களில், வியாழக்கிழமை அதிகாலை கீவ் நகரில் ரஷ்யா தொடர்ச்சியான சக்திவாய்ந்த தாக்குதலை முன்னெடுத்து ரஷ்யா உக்ரைன் மீது அடுத்தடுத்து ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் கொண்டு சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் வீடுகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்து தீப்பற்றி எரிந்ததில், ஒரு நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கீவ் நகர அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், இந்த வான்வழித் தாக்குதலால் காயமடைந்த […]

Read More

கோர சம்பவம்: 11 உயிர்கள் பறிபோனது…!மூவரை கண்டுபிடிக்க அவசர நடவடிக்கை.

அங்குருவத்தோட்டா – படகொடாவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் மூன்று பேரைக் காணவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொராணை மாவட்ட மருத்துவமனையில், இந்த விபத்தில் காயமடைந்த 7 பேர் தற்போது அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக, இல்லத்தில் இருந்த சுமார் 51 பேர் எந்தவித ஆபத்துமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தங்குவதற்கு தகுந்த வேறொரு இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நேற்று (03) பிற்பகல் […]

Read More

படப்பிடிப்பு தளத்தில் பெரும் விபத்து..! ஒருவர் உயிரிழப்பு.

இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வரும் எஸ்.ஜே. சூர்யா, சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் தான் ‘கில்லர்’. இந்தத் திரைப்படத்தில் ப்ரீத்தி அஸ்ராணி கதாநாயகியாக ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். பான் இந்தியத் திரைப்படமாக உருவாகி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த மூன்று நாட்களாக சென்னை பெரம்பூரில் இருக்கும் […]

Read More

பாக்ஸ் ஆபிஸை கலக்கும் சூர்யா…!கருப்பு படத்தின் மாபெரும் வசூல்

தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் கடந்த மே மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பிக் கொண்டு இருக்கும் திரைப்படம் கருப்பு. ஆர்.ஜே. பாலாஜி – சூர்யா கூட்டணியில் உருவான இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க, சாய் அப்யங்கர் இசையமைத்திருந்தார். கடந்த மே 15-ம் தேதி திரைக்கு வந்த இந்தத் திரைப்படம், ஆரம்பத்தில் கொஞ்சம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், ‘கருப்பு சாமி’ வழிபாட்டுப் பின்னணியைக் கொண்ட கதைக் களம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் படத்திற்குக் […]

Read More

கொழும்பை உலுக்கிய சோக சம்பவம்…! கோர விபத்தில் அறுவர் உயிரிழப்பு

மீகோட பகுதியில் வெசாக் தானசாலையில் உணவிற்காகக் காத்திருந்த மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில், மூன்று பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று இரவு அரங்கேறிய இந்த கொடூர விபத்தில் படுகாயமடைந்த மேலும் ஆறு பேர், அவசர சிகிச்சைக்காக ஹோமகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஹோமகம – மீகோட பகுதியில் உள்ள பிரதான வீதியோரம் அமைந்திருந்த வழிபாட்டிடத்தில், வரிசையில் நின்ற மக்கள் கூட்டத்தின் மீது […]

Read More