Skip to main content

Super Tamils

USGS ‘Red Alert’…! வெனிசுலாவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு

வெனிசுலாவில் இடம்பெற்ற பாரிய நிலநடுக்கங்களின் தாக்கத்தால் இறப்பு எண்ணிக்கை 100,000-ஐத் தாண்டக்கூடும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மதிப்பிட்டுள்ளது. முதலில், யாராகுய் மாகாணத்தின் சான் பெலிப் நகருக்குப் பக்கத்தில் 20 முதல் 22 கிலோமீட்டர் ஆழத்தில் 7.2 ரிக்டர் அளவில் ஒரு முன் அதிர்வு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வெறும் 39-40 வினாடிகளிலேயே, அதே மாகாணத்தின் யூமாரே பகுதியை மையமாக வைத்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் 7.5 ரிக்டர் அளவில் முதன்மையான பெரிய நிலநடுக்கம் உருவானது. […]

Read More

வெனிசுலா பேரழிவு…!மனிதாபிமான உதவிக்கு கனடா தயாராகிறது…! மார்க் கார்னி அறிவிப்பு.

வெனிசுலாவில் பேரழிவினால் ஏற்பட்டுள்ள மற்றும் பாதிக்கப்பட்ட, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். கனடா பிரதமர் மார்க் கார்னி அவர்கள் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றின் மூலமாக இந்த இரங்கலை வெளிப்படுத்தியுள்ளார். அந்தப் பதிவில் அவர் குறிப்பிடுகையில், ஒட்டுமொத்த கனடா நாட்டு மக்களின் சார்பாக இந்தத் துயரமான பேரிடரில் தங்களுக்குப் பிரியமானவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்குத் தனது மனமார்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் […]

Read More

சிறார்களின் இணையப் பாதுகாப்புக்கு புதிய நடவடிக்கை? கனடா அமைச்சர் விளக்கம்.

கனடா அரசு 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் உலகின் ஆபத்துகளில் இருந்து சிறுவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகள் ஏற்கனவே குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ளன. அந்த நாடுகளின் வழியைப் பின்பற்றி, தற்போது கனடா அரசாங்கமும் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. […]

Read More

கனடாவில் தீயில் பலியான தமிழ் பெண்; குடும்பம் சோகம்

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள லோயலிஸ்ட் டவுன்ஷிப் பகுதியில் வசித்து வந்த லக்‌ஷா என்ற இளம்பெண், தனது வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் போது தனது தாய்க்கு தொலைபேசியில் அழைத்த லக்‌ஷா, “அம்மா, வீட்டில் தீப்பிடித்து எரிகிறது, கதவுப் பகுதியையும் தீ சூழ்ந்துவிட்டதால் என்னால் வெளியே வர முடியவில்லை, என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கதறியுள்ளார். மகளின் அபயக்குரலைக் கேட்டு பதறியடித்துக்கொண்டு தாய் விரைந்து வந்தபோதிலும், அதற்குள் […]

Read More

கனடா பாடசாலையில் துப்பாக்கிச் சூடு; 10 பேர் உயிரிழப்பு

கனடாவின் டம்ப்ளர் ரிட்ஜ் பகுதியில் உள்ள ஒரு உயர்நிலைப் பாடசாலையில் நேற்று மதியம் நடந்த கோரமான துப்பாக்கிச் சூட்டில், தாக்குதல் நடத்தியவர் உட்பட சுமார் 10 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தத் துயரச் சம்பவத்தில் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மர்ம நபர் ஒருவர் திடீரென பாடசாலைக்குள் புகுந்து அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் உடனடியாக அவசரகால எச்சரிக்கை […]

Read More

கனடா செல்லும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளை முன்னிட்டு “பீபா விசா” (FIFA Visa) என்ற பெயரிலோ அல்லது அது போன்ற வேறு எந்த ஒரு பிரத்யேக சுற்றுலா விசாக்களோ வழங்கப்படப் போவதில்லை என்று கனடா அரசாங்கம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இது போன்ற பெயர்களில் வரும் தகவல்கள் போலியானவை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. யாராவது கனடாவிற்குள் நுழைய விரும்பினால், அதற்கு வழக்கமான சுற்றுலா விசா (Visitor Visa) அல்லது மின்னணு பயண அங்கீகாரம் (eTA) மட்டுமே போதுமானது. இதைத் தவிர […]

Read More

கனடா தற்காலிக விசா தமிழர்கள்: பகீர் தகவல்

தற்காலிக விசாக்களில் கனடாவுக்குள் வருபவர்கள் உரிய காலத்தில் வெளியேறுவதைக் கண்காணிப்பதற்காகப் புதிய டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் விசா விதிமுறைகளை மீறுபவர்களை மிக எளிதாகக் கண்டறிய முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நடைமுறைப்படி, ஒரு நபர் நாட்டை விட்டு வெளியேறும்போது எல்லைப் பாதுகாப்பு முகவரகம் அவரது விவரங்களைப் பதிவு செய்கிறது. இருப்பினும், விசா காலம் முடிந்தவுடன் அந்த நபர் தானாகவே வெளியேறிவிட்டாரா என்பதை உடனுக்குடன் கண்டறியும் தொழில்நுட்ப வசதி […]

Read More

100+ சிறுமிகள் பாதிப்பு: கனடா வாழ் தமிழருக்கு ஆயுள்

கனடாவின் டொராண்டோவைச் சேர்ந்த 40 வயது ரமணன் பத்மநாதன், அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகளை இணையதளம் வழியாகப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி பல ஆண்டுகளாக இந்தச் சுரண்டலில் அவர் ஈடுபட்டு வந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆஜரான ரமணன், சிறுமிகளை வற்புறுத்தி ஆபாசப் படங்களைத் தயாரித்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார். சுமார் ஏழு ஆண்டுகளாகத் திட்டமிட்டு நடத்தப்பட்டு வந்த இந்தச் சதித் திட்டம், அவர் […]

Read More

கனேடிய நாடாளுமன்றத்தில் யாழ் மண்ணின் மைந்தர்கள்

இலங்கையின் வளர்ந்து வரும் ராப் இசைகலைஞரான வாகிசன் இராசையா உள்ளிட்ட குழுவினர் கனடா நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளதுடன் அங்கு இடம்பெற்ற பொங்கல் விழாவிலும் பங்கேற்றுள்ளதுடன் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி உள்ளிட்ட பலரை சந்தித்துள்ளனர். பெரும் வரவேற்ப்பு. சமீபகாலமாக எங்கு பார்த்தாலும் யாழ் மண்ணின் மைந்தன் வாகீசனின் சொல்லிசைப் பாடல்கள் பெரும் அதிர்வை ஏற்படுத்தி வருகின்றன. தமிழ் மொழியைத் தனது அடையாளமாகக் கொண்டு மெட்டிசைக்கும் இந்தக் கலைஞர், கனடா நாடாளுமன்ற நிகழ்வில் பங்கேற்றிருப்பது உலகத்தமிழர்கள் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை […]

Read More