மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை சேவை…! சிறப்பு அடையாள அட்டை அறிமுகம்
சிறப்பு அடையாள அட்டைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குரிய சேவைகளை எவ்வித தாமதமும் இன்றி முன்னுரிமையடிப்படையில் பெற்றுக்கொள்வதற்காக, சிறப்பு அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முக்கிய முடிவை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய சபை அதிகாரப்பூர்வமாக எடுத்துள்ளது. கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் உபாலி பன்னில தலைமையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தின்போதே இத்தீர்மானம் எட்டப்பட்டது. இவற்றுடன் கூடுதலாக, மாற்றுத்திறனாளிகளை கண்ணியமாக அழைப்பதற்கும் குறிப்பிடுவதற்கும் பயன்படுத்த வேண்டிய சரியான கலைச்சொற்கள் அடங்கிய […]