மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள ஒரு சமூக நல மையத்தில், சுமார் 175 பழங்குடியினப் பெண்களுக்கு ஒரே நாளில் ஒரு மருத்துவரால் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது. போதிய படுக்கை வசதிகள் இல்லாத நிலையில், அறுவை சிகிச்சை முடிந்த பெண்கள் தார்ச்சாலையோரத்திலும், குப்பைத் தொட்டிகளுக்கு அருகிலும் தரையில் படுக்க வைக்கப்பட்டிருந்தனர். ஒரு பெண்ணுக்கு இரண்டு நிமிடம் என மிகக் குறுகிய நேரத்தில், முறையான சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாமல் இந்தச் சிகிச்சைகள் அவசரகதியில் முடிக்கப்பட்டுள்ளன.
மயக்க மருந்து நிபுணரின் ஆலோசனையின்றி, மருத்துவக் கருவிகளைச் சுத்திகரிக்காமலும் கையுறைகளை மாற்றாமலும் இந்த அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. காலை முதல் உணவோ தண்ணீரோ இன்றி காத்திருந்த அந்தப் பெண்களுக்கு, தொற்று ஏற்படும் அபாயம் உள்ள திறந்தவெளியில் சிகிச்சை அளிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மருத்துவர் தனது இலக்கை முடிப்பதில் மட்டுமே குறியாக இருந்து, நோயாளிகளின் பாதுகாப்பை முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்த செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, அம்மாநில சுகாதாரத் துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட முதன்மை மருத்துவ அதிகாரி உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும், அந்த மருத்துவர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் குறித்து விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளது.
___________________________________________________________________________________________________________________________________________
In a shocking incident in Madhya Pradesh, a single doctor performed sterilization surgeries on 175 tribal women in a single day, spending only two minutes per patient. The women were subjected to unhygienic conditions, left lying on the floor and near dustbins without food or water, leading to the immediate dismissal of the chief medical officer and a formal departmental inquiry.