2 நிமிடத்தில் 175 கருத்தடை அறுவைச் சிகிச்சை; வைத்தியர் சர்ச்சை
மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள ஒரு சமூக நல மையத்தில், சுமார் 175 பழங்குடியினப் பெண்களுக்கு ஒரே நாளில் ஒரு மருத்துவரால் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது. போதிய படுக்கை வசதிகள் இல்லாத நிலையில், அறுவை சிகிச்சை முடிந்த பெண்கள் தார்ச்சாலையோரத்திலும், குப்பைத் தொட்டிகளுக்கு அருகிலும் தரையில் படுக்க வைக்கப்பட்டிருந்தனர். ஒரு பெண்ணுக்கு இரண்டு நிமிடம் என மிகக் குறுகிய நேரத்தில், முறையான சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாமல் இந்தச் சிகிச்சைகள் அவசரகதியில் முடிக்கப்பட்டுள்ளன. […]