சீனாவுக்கும் இலங்கைக்குமிடையிலான நீண்டகால நட்புறவை மேலும் பலப்படுத்தவும், இரு தரப்புக்கும் பலன் தரும் ஒத்துழைப்புகளைத் தீவிரப்படுத்தவும் முழுமனதுடன் உழைக்கப் போவதாக அவர் புதிய தொடக்கமாகத் தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்ததும் ஊடகங்களுடன் பகிர்ந்துகொண்ட குறிப்பில், சீனத் தலைவர் ஷி ஜின்பிங்கின் மூலம் இந்த முக்கியப் பதவி தனக்கு வழங்கப்பட்டது பெரும் பாக்கியம் என அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பண்டைய கடல்வழி வர்த்தகம் மற்றும் பட்டுப்பாதை காலந்தொட்டே இரு நாடுகளுக்கும் இடையேயான பிணைப்பைச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த எழுபது வருடங்களுக்கும் மேலாகக் கட்டிக்காக்கப்பட்ட பரஸ்பர உதவியும் ஒற்றுமையும் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இறப்பர்-அரிசி ஒப்பந்தத்தையும் நினைவுகூர்ந்தார்.
அண்டை நாடுகளுடன் நட்புறவு பேணும் வெளியுறவுக் கொள்கையில் சீனா எப்போதும் இலங்கைக்கு முக்கிய இடமளித்து வருகிறது.
இந்தச் சூழலில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள இந்தப் பொறுப்பின் முக்கியத்துவத்தை முழுமையாகப் புரிந்துகொண்டுள்ள புதிய தூதர் வேய் ஹ_வாசியாங், இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய உறவைச் சிறப்பாக முன்னோக்கி நகர்த்துவதாக உறுதியளித்துள்ளார்.
Wei Huaxiang has arrived in Sri Lanka to assume duties as the new Ambassador of China, expressing a strong commitment to strengthening bilateral ties, building on historical connections like the Rubber-Rice pact, and prioritizing Sri Lanka in China’s neighborhood diplomacy.