பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை நீடிக்கவே அரசியலமைப்புத் திருத்தமா? சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்ட முக்கிய விளக்கம்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் தலைவர் ராஜீவ் அமரசூரிய மற்றும் செயலாளர் நளின் டி சில்வா கையெழுத்திட்டுள்ள கடிதத்தில், சங்கத்தின் நடைமுறைகளை மீறிச் செயல்பட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜகத் அபேநாயக்க அனுப்பிய கடிதம் முறைப்படி ஆராயப்படுவதற்கு முன்பே சமூக வலைத்தளங்களில் பரவியது சங்கத்திற்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் தொடர்புகள் எவ்வாறிருப்பினும், சங்கத்தின் விதிகளுக்குட்பட்டே உறுப்பினர்கள் செயற்பட வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது. குறிப்பிட்ட அரசியல் கட்சிகளில் அங்கம் வகிப்பவர்கள் செயற்குழுவில் பணியாற்றுவதை சட்டத்தரணிகள் […]