Skip to main content

Super Tamils

அனுராதபுரத்தில் பௌத்த பிக்குவினால் பாதிக்கப்பட்ட சிறுமி! அமைச்சர் வெளியிட்ட கடுமையான அறிவிப்பு

அனுராதபுரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்பில் அவதூறான கருத்துக்களை வெளியிட்ட நபர் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும். இது குறித்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விபரம் வெளியிடப்பட்டது. அங்கு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர், இச்சம்பவம் குறித்து மேலும் சில முக்கிய விபரங்களைப் பகிர்ந்துகொண்டார். பெற்ற மகளையே தேரருக்கு […]

Read More

இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போவது யார்…? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று மோதல்…!

பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று மோதல்…! தர்மசாலாவில் இன்று நடைபெறும் குவாலிபயர் 1 போட்டியில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் பெங்களூரு, குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறின. அதன்படி இன்று புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் குவாலிபையர் 1-ல் மோதுகின்றன. தர்மசாலாவில் நடைபெறும் இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு […]

Read More

அதிர்ச்சியில் இலங்கை…! மூளைக்காய்ச்சலால் அதிகரிக்கும் பாதிப்புகள்.

அம்பாந்தோட்டை பகுதியில் உள்ள அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில், ‘மெனிஞ்சைடிஸ்’ என்று அழைக்கப்படும் மூளைக்காய்ச்சல் நோய் பரவி வருவதாக ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் தற்சமயம் 1500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள கைதி ஒருவர் இந்த நோய் பாதிப்பால் உயிரிழந்திருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், சுகாதாரத் துறையினர் இது குறித்து மிக விரிவான விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். சிறைச்சாலை மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 17 கைதிகளிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில், இருவருக்கு இந்த மூளைக்காய்ச்சல் பாதிப்பு […]

Read More

தாஜுதீன் கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்…! மகிந்த ராஜபக்ச வீடு குறித்த தகவல்கோப் குழுவில் வெடிப்பு.

பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் மர்ம மரணம் தொடர்பான விசாரணைகளில் பேசப்பட்ட, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்குச் சொந்தமான வீடு ஒன்று குறித்து பொது நிறுவனங்கள் பற்றிய நாடாளுமன்றக் குழுவில் (COPE) அதிரடியான மற்றும் சர்ச்சைக்குரிய பல விபரங்கள் வெளிவந்துள்ளன. சர்ச்சைக்குரிய இந்த வீடு கொழும்பு, மாத்தா வீதியில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஆகும். கடந்த 1999 ஆம் ஆண்டில், மகிந்த ராஜபக்ச அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி […]

Read More

இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி- அமெரிக்க டொலர் பெறுமதி அதிகரிப்பு…!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு மிக வேகமாக சரிந்து வருவதன் காரணமாக, நாட்டில் அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களின் விலைகள், மின்சாரம் மற்றும் தண்ணீர்க் கட்டணங்கள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதோடு, ஏற்றுமதித் தொழிலுக்கான மூலப்பொருட்களை வாங்கும் செலவும் பெருமளவில் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ரூபாயின் இந்த வீழ்ச்சிக்கு இணையாக, நாட்டின் பொதுவான பணவீக்கமும் கணிசமான அளவு உயரும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் இலங்கைக்குத் தேவையான எரிபொருள், சமையல் எரிவாயு, மருந்துகள் […]

Read More

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…! எபோலா பரவல் ‘மிகவும் அதீத’ அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் தற்போது பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பு, அந்நாட்டு அளவில் ‘மிகவும் அதீத’ (Very High) எச்சரிக்கை நிலையை எட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. இந்தத் தொற்று அண்டை நாடுகளுக்கும் ‘அதிக’ (High) ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், சர்வதேச அளவில் இதற்கான அச்சுறுத்தல் தற்போதைக்குக் ‘குறைவாகவே’ (Low) இருப்பதாக அதன் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் குறிப்பிட்டுள்ளார். இப்பகுதியில் தற்போது பரவி வரும் எபோலா வைரஸானது, […]

Read More

போதைப்பொருள் விற்பனையால் சொகுசு வாழ்க்கை..!அதிரடியாக கைப்பற்றிய பொலிசார்.

கொழும்பு, பொரளைப் பகுதியில் உடனடி பணப் பரிமாற்ற முறைகள் மூலம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த தம்பதியினரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் நடத்திய தீவிர புலனாய்வுத் திட்டத்தின் அடிப்படையில் தான் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. பொரளை, பேஸ்லைன் வீதியில் உள்ள சிறிசர உயன பகுதியில் வசித்து வந்த இந்த தம்பதியினர், கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்தே இந்த சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்தை நடத்தி வந்துள்ளமை தற்போது வெளிச்சத்திற்கு […]

Read More