உயிர் பிழைத்த அதிசயம்…! 5 நாட்களுக்குப் பிறகு இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 21 வயது இளைஞர்
வெனிசுவேலாவின் லாகாயிரா மாநிலத்தில், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் 106 மணிநேரம் சிக்கியிருந்த 21 வயது இளைஞர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். நிலநடுக்க இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்த இந்த 21 வயது இளைஞரின் பெயர் ஆரோன் லெவி கேன்டிலோ வர்காஸ் என்று தெரியவந்துள்ளது. காரபல்லேடா நகரில் வசித்து வந்த இவரை, மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டெடுத்துள்ளதாக எல் சால்வடோர் நாட்டின் ஜனாதிபதி நயீப் புக்கலே தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த இக்கட்டான மீட்புப் பணியில் வெனிசுவேலா, மெக்சிகோ மற்றும் எல் […]